ETV Bharat / state

அகதிகளுக்கு போலி பாஸ்போர்ட் தயாரித்து வெளிநாட்டில் வேலை வாங்கிக் கொடுத்தவர் கைது!

author img

By

Published : Oct 4, 2019, 9:14 AM IST

man arrested in covai who make a fake passport for srilankan refugees

கோவை: இலங்கை அகதிகள் முகாம்களில் உள்ளவர்களுக்கு போலி ஆதார் கார்டு போலி வங்கி கணக்கு மூலம் பாஸ்போர்ட் வாங்கி வெளிநாட்டில் வேலை வாங்கிக் கொடுத்த கோவையைச் சேர்ந்தவரை கியூ பிரிவு காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

மதுரை, திருச்சியில் உள்ள அகதிகள் முகாமில் உள்ள சிலர் போலியான ஆவணங்களைத் தாக்கல் செய்து பாஸ்போர்ட் வாங்கியதாக அவர்களை கியூ பிரிவு காவலர்கள் கைது செய்தனர்.

இதனைத்தொடர்ந்து தமிழ்நாடு முழுவதும் உள்ள இலங்கை அகதிகள் முகாம்களில் உள்ளவர்களிடம் விசாரணை நடைபெற்றது. விசாரணையில் கிடைத்த தகவலின் அடிப்படையில் கோவை கணபதி புதூரை சேர்ந்த ரகுபதி என்பவரை கைது செய்து கியூ பிரிவு காவல்துறையினர் விசாரணை நடத்தினர்.

இவர், காந்திபுரம் 6வது வீதியில் விஷால் இன்பெக்ஸ் என்ற பெயரில் டூரிஸ்ட் அலுவலகம் நடத்தி வருவதும், திருப்பூர் மாவட்டம் காங்கேயம் பகுதியைச் சேர்ந்த ஆனந்த்குமார் என்பவருடன் சேர்ந்து, போலி ஆதார் கார்டு, போலி வங்கி கணக்கு மூலம் பாஸ்போர்ட் எடுத்து வெளிநாடுகளுக்கு வேலைக்கு ஆட்களை அனுப்பி வந்ததும் தெரிய வந்தது.

இதனையடுத்து ரகுபதியின் மீது வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர் அவரை கோவை மத்திய சிறையில் அடைத்தனர். மேலும், தலைமறைவாக உள்ள ஆனந்த்குமார் என்பவரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.

இதையும் படிங்க: சுபஸ்ரீ உயிரிழந்த விவகாரம் - ஒருநாள் உண்ணாவிரதப்போராட்டத்துக்கு உயர்நீதிமன்றம் அனுமதி!

Intro:போலி பாஸ்போர்ட் மூலம் வெளிநாடுகளுக்கு வேலைக்கு அனுப்பியவர் கைது.Body:அகதிகள் முகாமில் இருப்பவர்கள் போலியான ஆவணங்களை தாக்கல் செய்து இந்திய பாஸ்போட் பெற்று வெளிநாடுகளுக்கு செல்வதாக கிடைத்த தகவலின் பேரில் நேற்று அகதிகள் முகாமில் கியூ பிரிவு போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

மதுரை,திருச்சியில் போலி ஆவணங்களை தாக்கல் செய்து பாஸ்போட் வாங்கிய நபர்கள் சிலரை கியு பிராஞ்ச் போலீசார் கைது செய்தனர். இதனை தொடர்ந்து மாநிலம் முழுவதும் உள்ள இலங்கை அகதிகள் முகாம்களில் உள்ள இலங்கை தமிழர்களிடம் நேற்று விசாரணை நடைபெற்றது.இதன் ஒரு பகுதியாக கோவை மாவட்டத்தில் உள்ள இலங்கை அகதிகள் முகாமிலும் விசாரணை நடைபெற்றது.இதனை தொடர்ந்து


கோவை கணபதி புதூரை சேர்ந்தவர் ரகுபதி என்பவரிடம் விசாரணை நடைபெற்றது. அதில் கோவை காந்திபுரம் 6வது வீதியில் விஷால் இன்பெக்ஸ் என்ற பெயரில் டூரிஸ்ட் அலுவலகம் நடத்தி வருவது தெரிய வந்தது.மேலும்
திருப்பூர் மாவட்டம் காங்கேயம் பகுதியை சேர்ந்த ஆனந்த்குமார் என்பவருடன் சேர்ந்து, போலி ஆதார் கார்டு, போலி பேன் கார்டு, போலி வங்கி கணக்கு துவங்கி, அதன் மூலம் பாஸ்போர்ட் எடுத்து கொடுத்து இலங்கை அகதிகள் முகாமில் உள்ளவர்களை வெளிநாடுகளுக்கு வேலைக்கு அனுப்பி வருவது தெரிய வந்தது.இதன் அடிப்படையில் க்யூ பிராஞ்ச் போலீசார் ரகுபதியை கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.





Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.