ETV Bharat / state

சுபஸ்ரீ உயிரிழந்த விவகாரம் - ஒருநாள் உண்ணாவிரதப்போராட்டத்துக்கு உயர்நீதிமன்றம் அனுமதி!

author img

By

Published : Oct 3, 2019, 10:38 PM IST

சென்னை: பேனர் விழுந்து இளம் பெண் சுபஸ்ரீ உயிரிழந்த சம்பவத்தைக் கண்டித்து இளைய தலைமுறை அமைப்பினர் உண்ணாவிரதப் போராட்டம் நடத்த அனுமதியளிக்குமாறு காவல்துறையினருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

subhasree death case: chennai high court allows one day fasting protest

சென்னை பள்ளிக்கரணையில் அதிமுக பிரமுகர் ஜெயகோபால் வைத்திருந்த பேனர் விழுந்து, இளம்பெண் சுபஸ்ரீ உயிரிழந்தார். இந்த சம்பவத்துக்குக் காரணமான அரசு அலுவலர்களைக் கண்டித்து பள்ளிக்கரணை மாநகராட்சி அலுவலகம் முன்பாக அடையாள உண்ணாவிரதப் போராட்டம் நடத்த அனுமதி கேட்டு, இளைய தலைமுறை என்ற அமைப்பின் சார்பில் தமிழ்மணி என்பவர் உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி எம்.எஸ்.ரமேஷ் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, மாநில அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஏ.நடராஜன் ஆஜராகி, இந்த சம்பவம் தொடர்பாக காவல் ஆய்வாளர், மாநகராட்சி அலுவலர் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், இந்த சம்பவத்துக்குக் காரணமான அதிமுக பிரமுகர் ஜெயகோபால், அவரது உறவினர் மேகநாதன் உள்ளிட்ட தொடர்புடைய நபர்களையும் காவல் துறையினர் கைது செய்துள்ளதாகவும் தெரிவித்தார். மேலும், பிரதமர் நரேந்திர மோடி மற்றும் சீன அதிபர் தமிழ்நாடு வரவுள்ள நிலையில், மனுதாரருக்கு உண்ணாவிரதம் இருக்க அனுமதியளிக்க முடியாது எனவும் வாதிட்டார்.

மனுதாரர் தரப்பில், இந்த சம்பவத்தைக் கண்டித்து பிரதமர் மோடி தமிழ்நாடு வந்து சென்றபிறகு உண்ணாவிரதமிருக்க அனுமதியளிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

இதையடுத்து, இதுபோன்ற குற்றச்சம்பவங்கள் இனி நடந்தால், தொடர்புடைய அரசு அலுவலர்களின் மீது குற்றவியல் ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறி, மேடவாக்கம் பகுதியில் அக்டோபர் 14ஆம் நாளிற்குப்பின் ஒருநாள் உண்ணாவிரதமிருக்க மனுதாரர்களுக்கு அனுமதியளிக்கவேண்டும் என நீதிபதி, காவல் துறையினருருக்கு உத்தரவிட்டார்.

இதையும் படிக்க:‘என் மகளின் இறப்பிற்குக் காரணமானவர்களைப் பணிநீக்கம் செய்க!’ - சுபஸ்ரீ தந்தை ஆவேசம்

Intro:Body:பேனர் விழுந்து இளம் பெண் சுபஸ்ரீ பலியான சம்பவத்தைக் கண்டித்து இளைய தலைமுறை அமைப்பினர் உண்ணாவிரதப் போராட்டம் நடத்த அனுமதியளிக்க போலீசாருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை பள்ளிக்கரணையில் அதிமுக பிரமுகர் ஜெயகோபால் வைத்திருந்த பேனர் விழுந்து, இளம்பெண் சுபஸ்ரீ பலியானார். இந்த சம்பவத்துக்கு காரணமான அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், சுபஸ்ரீயின் குடும்பத்துக்கு ரூ. 5 லட்சம் இடைக்கால நிவாரணமாக வழங்க வேண்டும் என்றும் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இந்த சம்பவத்துக்கு காரணமான அதிகாரிகளைக் கண்டித்து பள்ளிக்கரணை மாநகராட்சி அலுவலகம் முன்பாக அடையாள உண்ணாவிரதப் போராட்டம் நடத்த அனுமதி கேட்டு இளைய தலைமுறை என்ற அமைப்பின் சார்பில் தமிழ்மணி என்பவர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எம்.எஸ்.ரமேஷ், சம்பவத்துக்கு காரணமான அதிகாரிகள் மீது குற்றவியல் ரீதியாக நடவடிக்கை எடுக்காதது ஏன் என கேள்வி எழுப்பியிருந்தார்.

இந்த வழக்கு மீண்டும் நீதிபதி எம்.எஸ்.ரமேஷ் முன் விசாரணைக்கு வந்தபோது, மாநில அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஏ.நடராஜன் ஆஜராகி, இந்த சம்பவம் தொடர்பாக ஏற்கனவே காவல் ஆய்வாளர் மற்றும் மாநகராட்சி அதிகாரி மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், இந்த சம்பவத்துக்கு காரணமான அதிமுக முன்னாள் கவுன்சிலர் ஜெயகோபால் மற்றும் அவரது உறவினர் மேகநாதன் உள்ளிட்ட தொடர்புடைய நபர்களையும் போலீசார் கைது செய்துள்ளதாகவும் தெரிவித்தார். மேலும், பிரதமர் மோடி மற்றும் சீன அதிபர் தமிழகம் வரவுள்ள நிலையில், மனுதாரருக்கு உண்ணாவிரதம் இருக்க அனுமதிக்க முடியாது என வாதிட்டார்.

அப்போது மனுதாரர் தரப்பில், தேவைப்பட்டால் இந்த சம்பவத்தைக் கண்டித்து பிரதமர் மோடி தமிழகம் வந்து சென்றபிறகு உண்ணாவிரதம் இருக்க அனுமதியளிக்க வேண்டும், என கோரப்பட்டது. அதையடுத்து, இதுபோன்ற சம்பவம் இனி நேர்ந்தால், தொடர்புடைய அதிகாரிகள் மீது குற்றவியல் ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறிய நீதிபதி, மனுதாரர் அமைப்பு சார்பில் மேடவாக்கம் பகுதியில் ஒருநாள் உண்ணாவிரதம் இருக்க அக்.14-ம் தேதிக்குப் பிறகு அனுமதியளிக்க வேண்டும் என போலீசாருக்கு உத்தரவிட்டு, வழக்கை முடித்து வைத்துள்ளார்.
Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.