ETV Bharat / state

தொடர் கனமழை: 3 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை!

author img

By

Published : Oct 21, 2019, 8:17 AM IST

tamilnadu

கோவை, சிவகங்கை, கன்னியாகுமரி மாவட்டங்களில் கனமழை காரணமாக இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

கோவை, சிவகங்கை, கன்னியாகுமரி மாவட்டங்களில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறையென அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர்.

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், திருவாரூர், தஞ்சை, கடலூர், தேனி, தூத்துக்குடி, கோவை, நீலகிரி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்துவருகிறது.

ஏற்கனவே இந்திய வானிலை ஆய்வு மையம் நேற்று காலை வெளியிட்ட அறிக்கையில், தென்மேற்கு வங்கக்கடலில் நிலவிவரும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரியில் அக்டோபர் 21 முதல் 24ஆம் தேதி வரை நான்கு நாட்களுக்கு கனமழை பெய்யும் என்று எச்சரிக்கை விடுத்ததுள்ளது குறிப்பிடதக்கது.

இதையும் படிங்க: 23ஆம் தேதி வரை மழை நீடிக்கும் - வானிலை ஆய்வு மையம்

Intro:Body:

Rain update in TamilNadu


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.