ETV Bharat / state

யானைகளுக்கிடையே மோதல்... உயிரிழந்த ஆண் யானை!

author img

By

Published : Sep 26, 2019, 11:22 PM IST

Elephant died in Coimbatore because of fight

கோயம்புத்தூர்: சாடிவயல் அருகே யானைகளுக்கு இடையே நடந்த மோதலில், பத்து வயது நிரம்பிய ஆண் யானை ஒன்று உயிரிழந்தது.

கோவை மாவட்டம், சாடிவயல் அருகே உள்ள காருண்யா நகர் பகுதியில் தனியாருக்கு சொந்தமான இடத்தில் காட்டு யானை ஒன்று இறந்து கிடப்பதாக மதுக்கரை வனத்துறையினருக்கு தகவல் வந்தது. இதனையடுத்து மதுக்கரை வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று, யானையின் உடலைக் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர்.

elephant-died-because-of-fight-with-fellow-elephant

விசாரணையைத் தொடர்ந்து, உயிரிழந்த ஆண் யானைக்கு பத்து வயது இருக்கும் எனவும், வயிற்றுப்பகுதியில் யானைக்குக் காயம் ஏற்பட்டிருந்ததால் யானைகளுக்கு இடையே நடந்த சண்டையில், வேறொரு யானை தாக்கி இந்த யானை உயிரிழந்திருக்கக்கூடும் எனவும் வனத்துறை அலுவலர்கள் தெரிவித்தனர்.

Intro:கோவை அருகே யானைகளுக்கு இடையே நடந்த மோதலில் ஆண் யானை உயிரிழப்பு..Body:
கோவை மாவட்டம் சாடிவயல் அருகே உள்ள காருண்யா நகர் பகுதியில் தனியாருக்கு சொந்தமான இடத்தில் காட்டு யானை இறந்து கிடப்பதாக மதுக்கரை வனத்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது .இதனையடுத்து மதுக்கரை வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு வந்து யானையின் உடலை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர். இதில் உயிரிழந்த ஆண் யானைக்கு 10 வயது இருக்கும் எனவும் இரு யானைகளுக்கு இடையே நடைபெற்ற மோதலில் இந்த யானை உயிர் இழந்திருப்பது தெரியவந்தது. மேலும் வயிற்றுப் பகுதியில் காயத்துடன் யானை உயிரிழந்துள்ளதால் யானைகளுக்கு இடையே நடந்த சண்டையில் மற்றொரு யானை தாக்கியதில் இந்த யானை உயிரிழக்கும் என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர். சம்பவ இடத்திற்கு வனத்துறை மருத்துவர் வரவழைக்கப்பட்டு யானையின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு அங்கேயே எரியூட்டப்படும் என வனத்துறையினர் தெரிவித்தனர்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.