ETV Bharat / state

Locanto-வில் Call Girl, Call Boy எனக்கூறி பல லட்சம் அபேஸ்; மும்பையில் பதுங்கிய 7 பேரை கோவை சைபர் கிரைம் கைது செய்தது எப்படி?

author img

By

Published : Jun 11, 2023, 6:25 PM IST

Updated : Jun 11, 2023, 6:39 PM IST

Etv Bharat
Etv Bharat

லோகாண்டோ என்ற இணையதளம் மூலம் இளைஞர்களிடம் லட்சக்கணக்கான ரூபாய் மோசடி செய்த 7 பேரை கோவை சைபர் கிரைம் போலீசார் மும்பையில் கைது செய்தனர்.

கோவை: லோகண்டா என்ற வலைதளம் மூலம் Call Girls and Call Boys என விளம்பரம் செய்து இளைஞர்களை ஏமாற்றி பல லட்சம் ரூபாய் மோசடி செய்த ஏழு பேரை கோவை மாநகர சைபர் கிரைம் காவல்துறையினர் மும்பையில் வைத்து இன்று (ஜூன் 11) கைது செய்துள்ளனர். இவர்கள் அந்த வலைதளம் மூலம் இந்தியாவின் முக்கிய நகரங்களை குறிவைத்து விளம்பரம் செய்து Call Boys வேலைக்காக ஆசைப்பட்டு வரும் இளைஞர்களிடம் ஆவணங்களை பெற்று அவர்கள் பெயரிலேயே வங்கி கணக்கு துவங்கி மோசடியில் ஈடுபட்டு வந்துள்ளனர்.

இந்நிலையில் தியாகு என்பவர் 7 லட்சத்து 84 ஆயிரம் ரூபாய் ஏமாந்ததாக கொடுத்த புகாரின் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதனையடுத்து, கோவை மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன் உத்தரவின் பேரில் விசாரணையை துவக்கிய கோவை மாநகர சைபர் கிரைம் (Covai Cyber Crime) போலீசார், சைபர் கிரைம் உதவி ஆணையாளர் சரவணன் மேற்பார்வையில் ஆய்வாளர் அருண் தலைமையில் தனிப்படை அமைத்து மும்பையில் இருந்த அப்சல் ரகுமான்(24), கர்ணன்(24), தமிழரசன்(23), மணிகண்டன்(22), ஜெயசூர்யாபாண்டியன்(25), விக்னேஷ்வீரமணி(25), பிரேம்குமார்(33) ஆகிய ஏழு பேரை மும்பையில் வைத்து கைது செய்துள்ளனர்.

மேலும், மோசடிக்கு பயன்படுத்திய 12 வங்கி கணக்குகளையும் சைபர் கிரைம் போலீசார் முடக்கம் செய்தனர். செல்போன் எண்களின் ஐபி முகவரி மற்றும் வங்கியின் KYC விவரங்களை கொண்டு இவர்கள் பிடிப்பட்டுள்ளனர். இந்நிலையில், கைது செய்யப்பட்ட ஏழு பேரையும் கோவை மாநகர ஆணையாளர் அலுவலகத்திற்கு அழைத்து வந்த போலீசார் அவர்களிடம் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: வங்கிக்காக மட்டுமே பயன்படுத்தப்படும் மொபைல் எண்களுக்கு குறி.. நைஜீரிய சைபர் கிரைம் கும்பல் சிக்கியது எப்படி?

இது குறித்து செய்தியாளர்களை சந்தித்த சைபர் கிரைம் உதவி ஆணையாளர் சரவணன் மற்றும் ஆய்வாளர் அருண், 'தியாகு என்பவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்து விசாரணை துவங்கப்பட்டது. தியாகு, தான் மோசடியாளர்களால் 7,80,000 ரூபாய் மோசடிக்கு உள்ளானார் என்றார். அத்துடன், KYC மூலம் மோசடியாளர்களிடம் அடையாளம் காணப்பட்டு மும்பையில் மோசடியாளர்கள் இருந்த இடத்தை கண்டறிந்து சென்று அவர்களை பிடித்ததாகவும் தெரிவித்தார்.

மேலும், மோசடியாளர்கள் லோகண்டா (Locanto Scam) வலைதளத்திற்கு பயன்படுத்திய 34 செல்போன்கள் 15 வங்கி பாஸ்புக்குகளை பறிமுதல் செய்துள்ளதாகவும் அவர் கூறினார். தமிழ்நாட்டை சார்ந்து இந்த மோசடி செய்ததால் குற்றவாளிகள் மும்பைக்குச் சென்று மோசடியில் ஈடுபட்டு வந்துள்ளனர். கைதான ஏழு பேரில் 5 பேர் பொள்ளாச்சியை சேர்ந்தவர்களும், ஒருவர் விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்தவரும் மற்றும் மற்றொருவர் மும்பையை சேர்ந்தவரும் ஆவர் என்றார். இவர்கள் மீது வேறு எதுவும் வழக்குகள் இல்லை என்று கூறிய அவர், இரண்டு வருடமாக இந்த குற்ற சம்பவத்தில் மட்டுமே ஈடுபட்டு வந்துள்ளதாகவும் கூறினார்.

இளைஞர்களிடம் ஆதார் அட்டைகளை வாங்கி மோசடியில் ஈடுபட்டுள்ளதோடு, இவர்கள் பலரின் ஆதார் அட்டைகள் மூலம் அவர்களின் வங்கி பரிவர்த்தனை உள்ளிட்டவைகளையும் தவறான நடவடிக்கைகளில் ஈடுபடுத்தி மோசடியில் ஈடுபட்டுள்ளனர் என்றும், இவ்வாறு மோசடி மூலம் கிடைக்கும் பணத்தைக் கொண்டு கோவா போன்ற மாநிலங்களுக்கு சென்று கொண்டாடி செலவு செய்துள்ளனர் என அவர் தெரிவித்தார்.

இதையும் படிங்க: லைக், கமெண்ட் மோசடி - மாநில சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை

Last Updated :Jun 11, 2023, 6:39 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.