ETV Bharat / state

கோவையில் இருசக்கர வாகன டயரில் துப்பட்டா சிக்கி விபத்து-10 வயது சிறுமி உயிரிழப்பு

author img

By

Published : Jan 29, 2022, 1:05 PM IST

Updated : Jan 29, 2022, 1:15 PM IST

கோவையில் துப்பட்டா டயரில் சிக்கி விபத்து-10 வயது சிறுமி உயிரிழப்பு
கோவையில் துப்பட்டா டயரில் சிக்கி விபத்து-10 வயது சிறுமி உயிரிழப்பு

கோவை அருகே இருசக்கர வாகனத்தில் பின்பக்கத்தில் அமர்ந்துவந்த பத்து வயது சிறுமியின் துப்பட்டா டயரில் சிக்கியதால் அச்சிறுமி தலை துண்டிக்கப்பட்டு உயிரிழந்தார்.

கோயம்புத்தூர்:கோவை மாவட்டம் அன்னூர் வடக்கலூரை சேர்ந்தவர் சுப்பிரமணி, ஓட்டுநரான இவருக்கு 10 வயதில் தர்ஷனா என்ற குழந்தை உள்ளது.

இவர் 5ஆம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் சிறுமி தர்ஷனாவிற்கு உடல் நிலை பாதிக்கப்பட்டதால் அருகில் வசிக்கும் விக்னேஷ் என்பவர் சிகிச்சைக்காக நேற்று இருசக்கர வாகனத்தில் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று விட்டு மீண்டும் வீடு திரும்பினர்.

அப்போது அன்னூர் ஓதி மலை சாலை ராம்நகர் என்ற இடத்தில் சென்றுகொண்டிருந்த போது சிறுமி அணிந்திருந்த துப்பட்டா இருசக்கர வாகனத்தின் பின்பக்க சக்கரத்தில் சிக்கி சிறுமியின் கழுத்தை இறுக்கியது. இதில் தலை துண்டித்து சிறுமி பரிதாபமாக உயிரிழந்தார்.

இது குறித்து அப்பகுதி மக்கள் அன்னூர் காவல்துறையினருக்குத் தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர் சிறுமியின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்
இச்சம்பவம் குறித்து காவல்துறை விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க:'மாணவர்கள் அதிகமுள்ள பள்ளிகளில் சுழற்சி வகுப்புகள் வேண்டும்'

Last Updated :Jan 29, 2022, 1:15 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.