ETV Bharat / state

பாசனத்திற்காக ஆழியாறு அணை திறப்பு! விவசாயிகள் மகிழ்ச்சி

author img

By

Published : Aug 18, 2019, 3:25 PM IST

aliyar dame

கோவை: விவசாய பாசனத்திற்காக பொள்ளாச்சி ஆழியார் அணையிலிருந்து தண்ணீரை சட்டப்பேரவை துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் திறந்துவைத்தார்.


விவசாய பாசனத்திற்காக ஆழியார் சிறுபுனல் மின் நிலையத்திலிருந்து தண்ணீரை தமிழ்நாடு சட்டப்பேரவை துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் திறந்துவைத்தார். இந்நிகழ்ச்சியில் வால்பாறை சட்டப்பேரவை உறுப்பினர் கஸ்தூரி வாசு, விவசாயிகள் திறக்கப்பட்ட தண்ணீரை மலர்தூவி வரவேற்றனர்.

பாசனத்திற்காக ஆழியாறு அணை திறப்பு

அதன் பின் செய்தியாளர்களைச் சந்தித்த பொள்ளாச்சி ஜெயராமன், வினாடிக்கு 120 கனஅடி வீதம் 135 நாட்களுக்கு தண்ணீர் திறக்கப்படும், இந்தத் தண்ணீர் பொள்ளாச்சி பழைய ஆயக்கட்டு பகுதியில் உள்ள ஆறாயிரத்து 400 ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டுள்ள முதல்போக நெல் சாகுபடிக்கும் தென்னை, வாழை சாகுபடிக்கு பயன்படும் எனக்கூறினார்.

மேலும் பேசிய அவர், முதலமைச்சர் அறிவித்த மூன்று அணைகள் கட்ட கேரளா அரசுடன் பேச்சுவார்த்தை நடத்திவருவதாகவும், விவசாயிகள் பயன்பெறும் வகையில் அதனை விரைவில் முடித்துக்காட்டுவோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Intro:damBody:damConclusion:பொள்ளாச்சி ஆழியார் அணையில் இருந்து விவசாயத்துக்கு தண்ணீர் திறப்பு. பொள்ளாச்சி – 18ஆழியார் அணையில் இருந்து தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவுபடி முதல் போக பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு - ஆழியார் சிறுபுனல் மின் நிலையத்திலிருந்து திறக்கபட்ட தண்ணீரை தமிழக சட்டப்பேரவை துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன், வால்பாறை சட்டமன்ற உறுப்பினர் கஸ்தூரிவாசு மற்றும் பழைய ஆயக்கட்டு விவசாயிகள் மலர் தூவி வரவேற்றனர் வினாடிக்கு 120 கனஅடி வீதம் 135 நாட்களுக்கு தண்ணீர் திறக்கப்பட்டது இதன் மூலம் பொள்ளாச்சி பழைய ஆயக்கட்டு பகுதியில் உள்ள 6,400 ஏக்கர் பரப்பளவுள்ள முதல் போக நெல் சாகுபடிக்கும் மற்றும் தென்னை வாழை சாகுபடிக்கு பயன்பெறும் எனவும் முதலமைச்சர் அறிவித்த மூன்று அணைகள் கட்ட கேரளா அரசுவுடன் பேச்சுவார்த்தை பின் விவசாயிகள் பயன் பெறும் வகைகள் அமையும் என துணை சபாநாயகர் தெரிவித்தார். பேட்டி- பொள்ளாச்சி ஜெயராமன் (துணை சபாநாயகர்)
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.