பெரிய காஞ்சிபுரத்தைச் சேர்ந்த கயாஸ் முகமது என்ற இளைஞர் முதுகலைப் பட்டம் படித்துள்ளார். ராயப்பேட்டையில் தனியார் மருத்துவமனை ஒன்றில் ஒருங்கிணைப்பாளராக பணிபுரிந்துவரும் இவர் அம்பத்தூர் எஸ்டேட் பகுதியில் தனது நண்பர் வீட்டில் வசித்துவந்துள்ளார்.
பெண்களை ஆபாசமாக புகைப்படங்கள் எடுத்து அதனை சமூக வலதளத்தில் பதிவிட்டுவருவதாக அவரது தோழி ஒருவர் காவல் துறையிடம் அளித்த புகாரின்பேரில் கயாஸ் முகமதை கைது செய்த காவல் துறையினர் அவரிடம் விசாரணை நடத்திவந்தனர்.
விசாரணையில், நண்பர்களுடன் விடுதியில் தங்கிப் படிக்கும்போது இணையதளத்தில் ஆபாச காணொலிகளை தொடர்ந்து பார்த்ததால் இவ்வாறு மாறினேன் எனக் கூறினார்.
ஆபாச படங்களைப் பார்ப்பதால் பெண்கள் உடல் மீதான மோகத்தில் ஆபாசமாக புகைப்படங்கள், காணொலிகள் எடுக்கத் தொடங்கியதாகவும் வீதிகள், பேருந்துகள், ரயில்களில் பெண்கள் செல்லும்போது ஆபாசமாக படம் எடுத்து அதனை தன் ஃபேஸ்புக்கில் பதிவேற்றம் செய்துள்ளதாகவும் திடுக்கிடும் வாக்குமூலம் அளித்துள்ளார்.
ஃபேஸ்புக்கில் எந்தப் புகைப்படம் அல்லது காணொலி அதிகம் பகிரப்படுகிறதோ அதில் ஆபாசமாக கருத்துகளைப் பதிவிடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளார். தன் மீது யாரும் புகார் அளிக்காமலிருக்க, ஃபேஸ்புக்கில் பதிவிடும் பெண்களின் முகத்தை மறைத்தும் மார்ஃபிங் செய்தும் வெளியிட்டு வந்துள்ளார்.
தன்னுடன் பணிபுரியும் பெண்கள் மட்டுமின்றி உறவினர்களையும் நண்பர்களையும் ஆபாசமாகப் படமெடுத்து ஃபேஸ்புக்கில் பதிவேற்றம் செய்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது. பின்னர், காவல் துறையினர் கயாஸ் முகமதை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க : ஆபாச வீடியோவால் அசிங்கப்பட்ட காவலர் - வைரல் வீடியோ!