ETV Bharat / state

பெண்களின் ஆபாச புகைப்படங்களை சமூக வலைதளத்தில் வெளியிட்ட இளைஞர் கைது!

author img

By

Published : Nov 5, 2019, 11:25 AM IST

Updated : Nov 5, 2019, 12:10 PM IST

பெண்களை ஆபாச படமெடுத்த இளைஞன் கைது

சென்னை : சமூக வலைதளத்தில் பெண்களின் ஆபாச புகைப்படங்களை வெளியிட்ட அம்பத்தூரைச் சேர்ந்த தனியார் நிறுவன ஊழியரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

பெரிய காஞ்சிபுரத்தைச் சேர்ந்த கயாஸ் முகமது என்ற இளைஞர் முதுகலைப் பட்டம் படித்துள்ளார். ராயப்பேட்டையில் தனியார் மருத்துவமனை ஒன்றில் ஒருங்கிணைப்பாளராக பணிபுரிந்துவரும் இவர் அம்பத்தூர் எஸ்டேட் பகுதியில் தனது நண்பர் வீட்டில் வசித்துவந்துள்ளார்.

பெண்களை ஆபாசமாக புகைப்படங்கள் எடுத்து அதனை சமூக வலதளத்தில் பதிவிட்டுவருவதாக அவரது தோழி ஒருவர் காவல் துறையிடம் அளித்த புகாரின்பேரில் கயாஸ் முகமதை கைது செய்த காவல் துறையினர் அவரிடம் விசாரணை நடத்திவந்தனர்.

பெண்களை ஆபாச படமெடுத்த இளைஞன் கைது

விசாரணையில், நண்பர்களுடன் விடுதியில் தங்கிப் படிக்கும்போது இணையதளத்தில் ஆபாச காணொலிகளை தொடர்ந்து பார்த்ததால் இவ்வாறு மாறினேன் எனக் கூறினார்.

ஆபாச படங்களைப் பார்ப்பதால் பெண்கள் உடல் மீதான மோகத்தில் ஆபாசமாக புகைப்படங்கள், காணொலிகள் எடுக்கத் தொடங்கியதாகவும் வீதிகள், பேருந்துகள், ரயில்களில் பெண்கள் செல்லும்போது ஆபாசமாக படம் எடுத்து அதனை தன் ஃபேஸ்புக்கில் பதிவேற்றம் செய்துள்ளதாகவும் திடுக்கிடும் வாக்குமூலம் அளித்துள்ளார்.

ஃபேஸ்புக்கில் எந்தப் புகைப்படம் அல்லது காணொலி அதிகம் பகிரப்படுகிறதோ அதில் ஆபாசமாக கருத்துகளைப் பதிவிடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளார். தன் மீது யாரும் புகார் அளிக்காமலிருக்க, ஃபேஸ்புக்கில் பதிவிடும் பெண்களின் முகத்தை மறைத்தும் மார்ஃபிங் செய்தும் வெளியிட்டு வந்துள்ளார்.

தன்னுடன் பணிபுரியும் பெண்கள் மட்டுமின்றி உறவினர்களையும் நண்பர்களையும் ஆபாசமாகப் படமெடுத்து ஃபேஸ்புக்கில் பதிவேற்றம் செய்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது. பின்னர், காவல் துறையினர் கயாஸ் முகமதை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

இதையும் படிங்க : ஆபாச வீடியோவால் அசிங்கப்பட்ட காவலர் - வைரல் வீடியோ!

Intro:சமூக வலைத்தளத்தில் பெண்களின் ஆபாச புகைப்படங்களை வெளியிட்ட அம்பத்தூரை சேர்ந்த தனியார் நிறுவன ஊழியரை போலீசார் கைது செய்துள்ளனர்Body:சமூக வலைத்தளத்தில் பெண்களின் ஆபாச புகைப்படங்களை வெளியிட்ட அம்பத்தூரை சேர்ந்த தனியார் நிறுவன ஊழியரை போலீசார் கைது செய்துள்ளனர்

பெரிய காஞ்சிபுரத்தை சேர்ந்த கயாஸ் முகமது என்ற வாலிபரை சென்னை போலீசார் வீட்டிற்கு சென்று கைது செய்துள்ளனர். முதுகலைப் பட்டம் படித்த முகமது ராயப்பேட்டையில் தனியார் மருத்துவமனை ஒன்றில் ஒருங்கிணைப்பாளராக பணிபுரிந்து வந்துள்ளார். அம்பத்தூர் எஸ்டேட் பகுதியில் நண்பர் வீட்டில் வசித்து வந்துள்ளார். அவரை பிடித்து போலீசார் விசாரணை செய்ததில்,நண்பர்களுடன் விடுதியில் தங்கி படிக்கும் போது இணையதளத்தில் ஆபாச வீடியோக்களை தொடர்ந்து பார்த்ததால்,இவ்வாறு மாறினேன் என தெரிவித்துள்ளார். ஆபாச படங்களை பார்ப்பதால் பெண்கள் உடல் மீதான மோகத்தில் ஆபாசமாக புகை படங்கள் மற்றும் வீடியோக்கள் எடுக்க துவங்கிய தாகவும் தெரிவித்துள்ளார்.வீதிகளில்,பேருந்துகளில், ரயில்களில் பெண்கள் செல்லும் போது ஆபாசமாக படம் எடுத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.அதை தன் அடையாளங்களை காட்டிக்கொள்ளாமல் புதியதாக பேஸ்புக் கணக்கு துவங்கி பதிவேற்றம் செய்துள்ளதாகவும் வாக்குமூலம் அளித்துள்ளார்.எந்த புகைப்படம் அல்லது வீடியோ அதிகம் பகிரப்படுகிறதோ அதில் ஆபாசமாக கருத்துகளை பதிவிடுவதும் வழக்கமாக கொண்டுள்ளார்.ஆனால் ஃபேஸ்புக்கில் போடப்படும் பெண்களின் முகத்தை மறைத்து,மார்பிங் செய்தும் வெளியிட்டு வந்துள்ளார்.இதனால் எந்த புகாரும் இல்லாமல் போலிசாரிடம் இருந்து தப்பிக்க எண்ணியதாக முகமது தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் பெண் தோழி ஒருவர்,கயாஸ் முகமதுஆபாச படங்களை பேஸ் புக்கில் பதிவேற்றம் செய்வதை கண்டு அதிர்ச்சியடைந்து போலிசாரிடம் புகார் கொடுத்ததன் மூலம்,முகமது போலிசாரிடம் சிக்கியுள்ளார்.சமூக வலைதள பக்கத்தின் ஐ.டிக்களை வைத்து தொழில்நுட்ப உதவியுடன் போலிசார் கயாஸ் முகமதை கைது செய்துள்ளனர்.உடன் வேலைபார்க்கும் பெண்கள் மட்டும் அல்லாது,குடும்ப உறுப்பினர் ,நண்பர்களையும் ஆபாசமாக படம் எடுத்து பதிவேற்றம் செய்ததும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. சென்னை போலிசார் கயாஸ் முகமதை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர்Conclusion:
Last Updated :Nov 5, 2019, 12:10 PM IST

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.