ETV Bharat / state

கடன் தொல்லையால் பெண் தற்கொலை

author img

By

Published : Dec 22, 2020, 4:28 PM IST

chennai
Women suicide

சென்னை: பல்லாவரம் அருகே கடன் தொல்லை காரணமாக பெண் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை பல்லாவரத்தையடுத்த சங்கர் நகர் பகுதியைச் சேர்ந்தவர் சுதர்சன் (42), இவரது மனைவி புவனேஸ்வரி (38) அழகு சாதன பொருட்கள் விற்பனை செய்யும் கடை நடத்திவருகின்றனர்.

ஊரடங்கு காரணமாக வியாபாரத்தில் 8 லட்சம் ரூபாய் வரை நஷ்டம் ஏற்பட்டதால் மன உளைச்சலில் இருந்த புவனேஸ்வரி கணவர் குளிக்கச் சென்ற சமயத்தில் படுக்கையறையில் தற்கொலை செய்துகொண்டார்.

suicide help line
தற்கொலை செய்யும் எண்ணமிருந்தால் ஒரு ஐந்து நிமிடம் இவர்களுடன் செலவிடுங்கள்

இதுகுறித்து சங்கர்நகர் காவல் நிலையத்திற்க்கு தகவல் கொடுக்கப்பட்ட தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு சென்ற காவல் துறையினர் உடலை மீட்டு உடற்கூராய்விற்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: குடும்பத் தகராறில் மனைவி கொலை: கணவன் கைது!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.