ETV Bharat / state

12ஆம் வகுப்புக்கு அடுத்து என்ன படிக்கலாம்..? எங்கு படிக்கலாம்..?  வல்லுநர்கள் வழங்கிய ஆலோசனை

author img

By

Published : Jun 25, 2022, 7:37 PM IST

12 ஆம் வகுப்பில் தேர்வான மாணவர்கள் என்ன படிக்கலாம்? எங்கு படிக்கலாம்? - வல்லுநர்கள் விளக்கம்
12 ஆம் வகுப்பில் தேர்வான மாணவர்கள் என்ன படிக்கலாம்? எங்கு படிக்கலாம்? - வல்லுநர்கள் விளக்கம்

தமிழ்நாட்டில் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள், அடுத்து என்ன படிக்கலாம், எங்கு படிக்கலாம் என்பதை தேர்வு செய்ய ஏதுவாக பல்வேறு துறை சார்ந்த வல்லுநர்கள் ஆலோசனை வழங்கியுள்ளனர்.

சென்னை: “நான் முதல்வன்” திட்டத்தின் கீழ் 12 ஆம் வகுப்பு பயின்ற மாணவர்களுக்கான உயர்கல்விக்கு வழிகாட்டும் “கல்லூரி கனவு” நிகழ்ச்சி நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்றது. இதனை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்வில் சென்னையில் உள்ள அரசு, அரசு உதவி பெறும் தனியார் மேல்நிலைப் பள்ளி மாணவ மாணவியர்கள் கலந்து கொண்டனர்.

இதுகுறித்து ஈடிவி பாரத் தமிழ் ஊடகத்திற்கு பிரத்யேகமாக பேட்டியளித்த தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகத்தின் மேலாண் இயக்குனர் இன்னசென்ட் திவ்யா ஐஏஎஸ், “இத்திட்டத்தின் நோக்கம், மேல்நிலைப் பள்ளிகளில் படித்து தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவிகள் உயர்கல்விக்கான வாய்ப்புகள், பிரிவு வாரியான பட்டப்படிப்புகள், பட்டயப்படிப்புகள் என்னென்ன உள்ளன. கல்லூரிகளை எவ்வாறு தேர்ந்தெடுப்பது. மேற்படிப்பினை முடித்தவுடன் கிடைக்கும் வேலைவாய்ப்புகள் உள்ளிட்டவை குறித்து அறிந்துகொள்ள துறைச்சார்ந்த வல்லுநர்கள் மற்றும் கல்வியாளர்களைக் கொண்டு வழிகாட்டுதல்கள் வழங்கப்படுகிறது.

அந்த வகையில் உயர் கல்வித்துறை, தொழில்நுட்பக் கல்வி இயக்ககம், அண்ணா பல்கலைக்கழகம், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகம், தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம், தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக் கழகம், தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம், தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர் பல்கலைக்கழகம், கல்லூரி இயக்குநரகம் மற்றும் தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் சார்பில் அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன.

தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகத்தின் மேலாண் இயக்குனர் இன்னசென்ட் திவ்யா ஐஏஎஸ் பிரத்யேக பேட்டி

இதேபோன்று மாநிலம் முழுவதும் மாணவர்களுக்கு ஆலோசனைகள் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. இதனால் மாணவர்களின் இடைநிற்றல் தவிர்க்கப்படும். கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கை முழுமையாக நடைபெறும். வரக்கூடிய காலங்களில் 11, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வழிகாட்டுதல் வழங்கப்படும்” எனத் தெரிவித்தார்.

மருத்துவப்படிப்புகள்: இதனைத் தொடர்ந்து பேசிய தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழக துணைவேந்தர் டாக்டர் சுதா சேஷய்யன், “மருத்துவப் படிப்பில் மருத்துவம் எம்பிபிஎஸ், பல் மருத்துவம் பிடிஎஸ், இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி உள்ளிட்ட மருத்துவப் படிப்புகளும், மருந்தாக்கியல், செவிலியர் படிப்பு, இயன்முறை துறை, தொழில் வழி சிகிச்சை உள்ளிட்ட பாடப்பிரிவுகள் உள்ளன.

மிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழக துணைவேந்தர் டாக்டர் சுதா சேஷய்யன் பிரத்யேக பேட்டி

துணை மருத்துவப் படிப்புகளாக பிஎஸ்சி விபத்து மற்றும் அவசர சிகிச்சை தொழில்நுட்பம், கார்டியாக் டெக்னாலஜி, கார்டியோ பல்மனரி பெர்ஃப்யூஷன் டெக்னாலஜி, டயாலிசிஸ் டெக்னாலஜி, அவசர சிகிச்சை டெக்னாலஜி, மருத்துவர் உதவியாளர், கதிரியக்க சிகிச்சை டெக்னாலஜி உள்ளிட்ட பிரிவுகளில் பட்டப் படிப்பு உள்ளது.

அரசு பள்ளிகளில் பயின்ற மாணவர்களுக்கு இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. மேலும், மாணவர்கள் வருடத்திற்கு குறைந்த செலவில் பட்டயப் படிப்புகள் மேற்கொள்ளலாம். சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள மருத்துவக் கல்வி இயக்குநரகம் மூலம் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் வழங்கப்படுகிறது” எனக் கூறினார்.

டிப்ளமோ படிப்புகள்: தொடர்ந்து பேசிய தமிழ்நாடு டிப்ளமோ கல்லூரி முதல்வர் முத்துக்குமார், “பத்தாம் வகுப்பு முடித்தவர்கள் டிப்ளமோ படிப்பில் நேரடியாக சேரலாம். பிகாம் படிப்பிற்கு இணையான பாடமுறை, டிப்ளமோ படிப்பில் உள்ளது. வணிகம், பொருளாதாரம் போன்ற படிப்புகளில் மாணவர்கள் சேரலாம்.

தமிழ்நாடு டிப்ளமோ கல்லூரி முதல்வர் முத்துக்குமார் பிரத்யேக பேட்டி

ஆட்டோமொபைல், கேட், உள்ளிட்ட 8 புதிய பாடப்பிரிவுகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மூன்று வருட படிப்பை முடித்தவுடன் வேலை வாய்ப்பு கிடைக்க அதிக வாய்ப்புள்ளது. மேலும், சில மருத்துவத்துறை சார்ந்த டிப்ளமோ படிப்புகளும் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. பத்தாம் வகுப்பில் அதிக மதிப்பெண்கள் வாங்கிய மாணவர்கள் உடனடியாக சேர்க்கப்படுவார்கள்.

மேலும், இந்தத் திட்டத்தின் மூலம் மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் பாடப்பிரிவு சார்ந்த ஒரு விளக்கம் தரப்படுகிறது. அரசு பாலிடெக்னிக் என்பதால் குறைந்த கட்டணமே வசூலிக்கப்படுகிறது. மேலும் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்களை மாணவர்கள் அனுப்பலாம்” எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: 12ஆம் வகுப்பு படித்த மாணவர்களுக்கு உயர் கல்விக்கு வழிகாட்ட "கல்லூரி கனவு" நிகழ்ச்சி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.