ETV Bharat / state

தூய்மை பணியாளர்களுக்கு பாதபூஜை செய்த விஜய் மக்கள் இயக்கம்!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 11, 2023, 4:05 PM IST

120 தூய்மை பணியாளர்களுக்கு பாதபூஜை செய்த விஜய் மக்கள் இயக்கம்
120 தூய்மை பணியாளர்களுக்கு பாதபூஜை செய்த விஜய் மக்கள் இயக்கம்

Vijay makkal iyakkam: நீலாங்கரை தூய்மை பணியாளர்களுக்கு புறநகர் மாவட்ட மக்கள் இயக்கத்தின் சார்பில் பாத பூஜை செய்யப்பட்டது.

120 தூய்மை பணியாளர்களுக்கு பாதபூஜை செய்த விஜய் மக்கள் இயக்கம்

சென்னை: மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை உள்பட 4 மாவட்டங்களில் வரலாறு காணாத மழைப்பொழிவு ஏற்பட்டது. இதன் காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், மற்றும் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் வெள்ள பாதிப்பு ஏற்பட்டு, மக்கள் அத்தியாவசிய தேவைகளுக்குக் கூட வெளியே வர முடியாமல் கடும் சிரமத்திற்கு ஆளாகினர்.

இதனையடுத்து பாதிக்கப்பட்ட பொதுமக்களை மீட்கவும், அவர்களுக்குத் தேவையான நிவாரண உதவிகளை வழங்கிடவும் தமிழ்நாடு அரசு போர்க்கால அடிப்படையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மேலும் பல்வேறு அரசியல் கட்சியினர், தன்னார்வலர்கள் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் மற்றும் நிதி உதவிகள் செய்து வருகின்றனர். வெள்ளித்திரை பிரபலங்கள், சின்னத்திரை பிரபலங்கள் கலக்கப்போவது பாலா, அறந்தாங்கி நிஷா உள்ளிட்ட பலரும் தங்களால் முடிந்த பணம் மற்றும் பொருள் உதவிகளை செய்து வருகின்றனர்.

புளியந்தோப்பு உள்ளிட்ட வடசென்னை பகுதி, வேளச்சேரி, பள்ளிக்கரணை, சென்னையின் புறநகர் உள்ளிட்ட பகுதிகளில் தற்போது வரையும் பாதிப்பு ஏற்பட்ட இடங்களில் முழுமையாக தண்ணீர் வடியாததால் இயல்பு நிலை திரும்பவில்லை. அப்பகுதியில் பொதுமக்கள் அத்தியாவசிய பொருட்கள் கிடைக்காமல் அவதிப்பட்டு வருகின்றனர்.

சென்னையில் தேங்கிய கழிவுநீர் மற்றும் குப்பைகளை தூய்மை பணியாளர்கள் இரவு பகலாக அப்புறப்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில் நடிகர் விஜய்யின்‌ மக்கள் இயக்கம் சார்பில் பல்வேறு கட்ட நலத்திட்ட உதவிகள் செய்யப்பட்டு வருகின்றன. நடிகர் விஜய்யின் உத்தரவின் பேரில் இது செயல்படுத்தப்பட்டு வருகிறது.

அகில இந்திய பொதுச் செயலாளர் புஸ்ஸி N.ஆனந்த் வழிகாட்டுதல் படி, "மிக்ஜாம்" வெள்ள பாதிப்பு ஏற்பட்ட பகுதிகளில் நாமெல்லாம் வெளிய வருவதற்கு அஞ்சி இருந்த நாட்களில் தனது வீட்டை மறந்து தெருக்களில் வந்து நின்று, நாம் வசிக்கும் பகுதியை சுத்தம் செய்தனர்.

அவர்களை கௌரவிக்கும் வகையில் நீலாங்கரை தூய்மை பணியாளர்களுக்கு புறநகர் மாவட்ட மக்கள் இயக்கத்தின் சார்பில் சரவணன் தலைமையில் பாத பூஜை செய்யப்பட்டது. மேலும் தூய்மை பணியாளர்களுக்கு 120 பேருக்கு 5 கிலோ அரிசி வழங்கி, மரியாதை செலுத்தப்பட்டது.

இதையும் படிங்க: வெள்ளத்தில் சிக்கிய வாகனங்களை பழுதுபார்க்க இலவச சிறப்பு முகாம்.. உதவி எண்களை அறிவித்த தமிழ்நாடு அரசு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.