ETV Bharat / state

'இளையராஜாவை வைத்து அரசியல்.. கனவு காணும் பாஜக' - திருமாவளவன்

author img

By

Published : Dec 5, 2022, 2:19 PM IST

திருமாவளவன் பேட்டி
திருமாவளவன் பேட்டி

தமிழ்நாட்டை குறிவைத்துள்ள பாஜக, இளையராஜா போன்றவர்களை வைத்து அரசியல் செய்யலாம் என கனவு கண்டு கொண்டிருக்கிறது என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

சென்னை: ஜி20 மாநாடு தொடர்பாக பிரதமர் மோடி தலைமையில் நடக்கும் அனைத்து கட்சி ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் இன்று (டிச. 5) டெல்லி புறப்பட்டு சென்றார்.

அப்போது விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்தியாவில் ஜி20 மாநாடு நடக்க இருப்பது வரவேற்கத்தக்கது. இன்று டெல்லியில் பிரதமர் தலைமையில் நடைபெறும் அனைத்து கட்சி கூட்டத்திற்கு அழைப்பு வந்ததன் அடிப்படையில் இன்று தானும் கூட்டத்தில் பங்கேற்க செல்கிறேன் என்றார்.

திருமாவளவன் பேட்டி

தமிழ்நாட்டில் பாஜகவினர் காமெடி செய்து கொண்டிருக்கின்றனர். அவர்களே நகைச்சுவை செய்துவிட்டு அவர்களே சிரித்துக் கொள்கின்றனர். தமிழ்நாட்டை பொறுத்தவரை பாஜகவை கண்டு யாரும் அச்சம் படுவதற்கு எதுவும் இல்லை என தெரிவித்தார்.

தமிழ்நாட்டை குறிவைத்துள்ள பாஜக, இளையராஜா போன்றவர்களை வைத்து அரசியல் செய்யலாம் என கனவு கண்டு கொண்டிருக்கிறது. காசியில் தமிழ் சங்கமம் என்ற பெயரில் ஒரு நாடகம் நடத்தி உள்ளனர். தமிழ்நாடு மக்கள் அதை பொருட்படுத்தவில்லை, அது பற்றி பேசுவதில் ஒரு பிரயோஜனமும் இல்லை என்றார்.

ஜெயலலிதாவின் கீழ் இயங்கிய அதிமுகவினர் தற்போது நான்கு குழுக்களாக பிரிந்துள்ளனர். இது அவர்கள் ஜெயலலிதாவுக்கு செய்யக்கூடிய துரோகம் என கூறினார்.

அதிமுக சிதறி கிடப்பது, அதிமுகவிற்கு மட்டுமல்ல திராவிட அரசியலுக்கு ஊறுவிளைப்பதாக அமையும். இதை பாஜக பயன்படுத்தி கொள்ளும் என அதிமுக தொண்டர்கள் புரிந்து கொள்ள வேண்டும் என தெரிவித்த அவர் பிரதமர் மோடி அவரது தாயை சந்திப்பதையும் அரசியல் ஆக்குகிறார் என்றும் கூறினார்.

இதையும் படிங்க: பயணம் உண்டு, பயம் இல்லை: மாரத்தான் போட்டியில் மாற்றுத்திறனாளி மாணவி!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.