ETV Bharat / state

இரவு 7 மணி செய்திச் சுருக்கம்

author img

By

Published : Oct 17, 2021, 7:25 PM IST

Top 10 News @ 7 PM
Top 10 News @ 7 PM

ஈடிவி பாரத்தின் இரவு 7 மணி செய்திச் சுருக்கத்தைக் காணலாம்...

1. 2003இல் ஆணவப் படுகொலை செய்யப்பட்ட முருகேசனின் தாய் மீது தாக்குதல் - 7 பேர் மீது வழக்கு

விருத்தாசலத்தில் கடந்த 2003ஆம் ஆண்டு ஆணவ படுகொலை செய்யப்பட்ட முருகேசனின் தாயார் மீது கும்பல் ஒன்று தாக்குதல் நடத்தியுள்ளது. இது தொடர்பாக 7 பேர் மீது காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

2. 'நிவாரண பொருட்கள் கிடைப்பதை உறுதி செய்க' - முதலமைச்சர் ஸ்டாலின்

கனமழையால் சேதமடைந்த மாவட்டங்களில் பொது மக்களுக்கான அத்தியாவசியப் பொருட்கள் தங்குதடையின்றி கிடைப்பதுடன், அவர்களுக்கான நிவாரண பொருட்கள் கிடைப்பதை உறுதி செய்திட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அலுவலர்களை அறிவுறுத்தினார்.

3. சேவையிலும் தானத்திலும் சிறந்தது மனித உயிரை காக்கும் ரத்த தானமே..! - பி.ஆர். பாண்டியன்

மன்னார்குடி தமிழ்ச் சங்கத்தின் சார்பில் நடைபெற்ற ரத்ததான முகாமில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் பி.ஆர். பாண்டியன் ரத்ததான முகாமைத் தொடங்கி வைத்தார்.

4. கேரள வெள்ளம்: கடவுளின் தேசத்தில் கோரத் தாண்டவம் ஆடிய மழை!

கேரளாவில் கோட்டயம், பத்தனம்திட்டா உள்ளிட்ட ஐந்து மாவட்டங்களில் இடைவிடாமல் பெய்யும் மழையால் தாழ்வானப் பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது.

5. கேரள நிலச்சரிவில் உயிரிழப்பு 12ஆக உயர்வு; தொடரும் மீட்புப் பணிகள்

கேரளா மாநிலம், கோட்டயம், இடுக்கி மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள நிலச்சரிவில் சிக்கி இதுவரை 12 பேர் உயிரிழந்துள்ளனர்.

6. 'ஆயிரம் சசிகலா வந்தாலும் அதிமுகவை அசைக்க முடியாது' - சி.வி.சண்முகம் ஆவேசம்!

ஆயிரம் சசிகலா வந்தாலும் அதிமுகவை அசைக்க முடியாது என முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் ஆவேசமாகப் பேசியுள்ளார்.

7. காஷ்மீரில் 13 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை!

காஷ்மீரில் 13 பயங்கரவாதிகள் படுகொலையுடன் தொடர்புடைய 13 பயங்கராவதிகள், 9 என்கவுண்டர்களில் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளதாக காஷமீர் ஐஜி விஜயகுமார் தெரிவித்துள்ளார்.

8. மழலையர் பள்ளிகள் திறப்பு குறித்து அமைச்சர் அன்பில் மகேஷ் பதில்

மழலையர் பள்ளிகளைத் திறப்பது குறித்து முதலமைச்சருடன் நாளை ஆலோசனை நடத்தப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார்.

9. 'எப்போவும் எங்களுக்கு தோனிதான் முக்கியம்' - சிஎஸ்கே சீக்ரெட்

ஐபிஎல் தொடரின் அடுத்த சீசனில் சென்னை அணி தக்கவைக்கும் முதல் வீரராக தோனி இருப்பார் என அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

10. பாஜக பிரமுகர் கல்யாணராமன் ட்விட்டர் பக்கம் நிரந்தர முடக்கம்?

பாஜக பிரமுகர் கல்யாணராமனின் ட்விட்டர் பக்கத்தை நிரந்தரமாக முடக்க காவல் துறையினர் தரப்பில் ட்விட்டர் நிறுவனத்திடம் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.