ETV Bharat / state

மாலை 5 மணி செய்திச்சுருக்கம் Top 10 News @ 5PM

author img

By

Published : Oct 8, 2021, 5:01 PM IST

மாலை 5 மணி செய்திச்சுருக்கம் Top 10 News @ 5PM
மாலை 5 மணி செய்திச்சுருக்கம் Top 10 News @ 5PM

ஈடிவி பாரத்தின் மாலை 5 மணி செய்திச்சுருக்கம்..

1.கட்டப்பையில் வைத்து பெண் குழந்தை கடத்தல் - சிசிடிவியை வைத்து விசாரணை

தஞ்சாவூர் அரசு மருத்துவமனையில் பிறந்து நான்கு நாள்களே ஆன பெண் குழந்தையை கட்டப்பையில் வைத்து கடத்திச் சென்ற பெண்ணை காவல் துறையினர் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

2.புதுச்சேரிவாசிகளின் ஆக்கிரமிப்பில் பாசன வாய்க்கால்கள் - மீட்டு கொடுக்க தமிழ்நாட்டு மக்கள் கோரிக்கை

திருவாரூர் விவசாயிகளின் பாசன வாய்க்கால்களை ஆக்கிரமித்துள்ள புதுச்சேரி மக்களிடம் இருந்து ஆக்கிரமிப்புகளை அகற்றி, திருவாரூர் விவசாயிகளிடம் கொடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

3.68 ஆண்டுகள் கழித்து டாடா வசமானது ஏர் இந்தியா

ஏர் இந்தியா நிறுவனத்தை டாடா நிறுவனம் ஏலத்தில் எடுத்துள்ளதாக அதிகாரப் பூர்வ அறிவிக்கப்பட்டுள்ளது.

4.முதலமைச்சர் தலைமையில் வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மாநில அளவிலான வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு (DISHA Committee) அமைக்கப்பட்டுள்ளது.

5.பத்திரிகையாளர்கள், அரசியல் தலைவர்கள் மீதான அவதூறு வழக்குகள் ரத்து

கடந்த ஆட்சியில் பத்திரிகையாளர், அரசியல் கட்சி தலைவர் மீது போடப்பட்ட 50 அவதூறு வழக்குகளை ரத்து செய்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

6.லக்கிம்பூர் படுகொலை.. கைது செய்யாமல், கெஞ்சுவதா? உத்தரப் பிரதேச அரசுக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம்!

லக்கிம்பூர் படுகொலை.. கைது செய்யாமல், கெஞ்சுவதா? உத்தரப் பிரதேச அரசுக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம்!

7.ஏன் ஆண்களை கேள்வி கேட்பதில்லை? - சமந்தா

அடிப்படையிலேயே சமூகத்தில் ஒழுக்கமில்லை என்று நடிகை சமந்தா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் குற்றஞ்சாட்டியுள்ளார்.

8.புதுவை அரசின் டெல்லி பிரதிநிதியாக பதவியேற்ற மல்லாடி கிருஷ்ணா ராவ்

புதுச்சேரி அரசின் டெல்லி பிரதிநிதியாக மல்லாடி கிருஷ்ணா ராவுக்கு முதலமைச்சர் ரங்கசாமி பதவி வழங்கினார்.

9.கத்திப்பாரா நகர்ப்புற சதுக்கப் பணிகள் குறித்து முதலமைச்சர் ஆய்வு!

கத்திப்பாரா மேம்பாலம் கீழ் அமைக்கப்பட்டு வரும், கத்திப்பாரா நகர்ப்புற சதுக்கப் பணிகளை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (அக்.8) நேரில் ஆய்வு செய்தார்.

10.பசுபதி பாண்டியனின் ஆதரவாளர் கொலை வழக்கு: இதுவரை 7 பேர் கைது

பசுபதி பாண்டியனின் தேவேந்திரகுல இளைஞரணியில் முக்கிய நிர்வாகியாக இருந்துவந்த கோபாலகிருஷ்ணன் என்பவர், அடையாளம் தெரியாத நபர்களால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார். இக்கொலை வழக்கில் இதுவரை 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.