ETV Bharat / state

3 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 3pm

author img

By

Published : Sep 21, 2020, 3:20 PM IST

Top 10 news @ 3 pm
Top 10 news @ 3 pm

ஈடிவி பாரத்தின் 3 மணி செய்திச் சுருக்கம் இதோ...

  • பிகாரில் பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார் பிரதமர் மோடி!

பாட்னா: பிகாரில் ஒன்பது நெடுஞ்சாலை திட்டங்கள் உள்பட பல்வேறு புதிய திட்டங்களுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டியுள்ளார்.

  • வைகை அணையிலிருந்து நீர் திறக்க உத்தரவு!

சென்னை: வைகை அணையிலிருந்து பாசன வசதிக்காக தண்ணீர் திறந்துவிட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

  • தவறாக பரப்புரை செய்யும் எதிர்க்கட்சிகள் - தமிழ்நாடு பாஜக தலைவர் எல். முருகன்

மதுரை: புதிய மசோதாக்களால் விவசாயிகள் பாதிக்கப்படுவார்கள் என எதிர்க்கட்சிகள் தவறாக பரப்புரை மேற்கொள்கின்றனர் என தமிழ்நாடு பாஜக தலைவர் எல். முருகன் தெரிவித்துள்ளார்.

  • நகரும் நியாய விலைக்கடை சேவை - முதலமைச்சர் தொடங்கிவைத்தார்

சென்னை: தமிழ்நாட்டில் நகரும் நியாய விலைக் கடைகள் சேவையை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று தலைமைச் செயலகத்தில் தொடங்கிவைத்தார்.

  • கலை, அறிவியல் கல்லூரி பருவத்தேர்வுகள் இன்று தொடக்கம்

புதுச்சேரி: கலை, அறிவியல் கல்லூரி பருவத்தேர்வுகள் இன்று தொடங்கின.

  • அன்லாக் 4.0: வழிகாட்டுதல்களுடன் பள்ளிகள் மீண்டும் திறப்பு!

டெல்லி: மத்திய அரசின் தளர்வுகளின் அடிப்படையில், சுமார் 6 மாத இடைவெளிக்குப் பிறகு குறிப்பிட்ட சில மாநிலங்களில் பள்ளிகள் மீண்டும் இன்று (செப் 21) திறக்கப்பட்டுள்ளன.

  • மாநிலங்களவையில் அமளியில் ஈடுபட்ட எட்டு எம்.பி.க்கள் அதிரடி சஸ்பெண்ட்

டெல்லி: மாநிலங்களவையில் அமளியில் ஈடுபட்ட எட்டு உறுப்பினர்களை இடைநீக்கம் செய்வதாக மாநிலங்களவைத் தலைவர் வெங்கையா நாயுடு அறிவித்துள்ளார்.

  • நடிகர் உதயாவின் "செக்யூரிட்டி" குறும்படத்திற்கு உலக அரங்கில் அங்கீகாரம்!

ஃபோர்ட்பிளேயர் சர்வதேச திரைப்பட விழாவில், 20 நாடுகள் கலந்து கொண்ட போட்டியில் சிறந்த இந்தியன் ஷார்ட் ஃபிலிமாக உதயாவின் "செக்யூரிட்டி" குறும்படம் தேர்வாகியுள்ளது.

  • கஞ்சாவுடன் பிரபல ரவுடி கைது!

மதுரை: 25 கிலோ கஞ்சா கடத்தியதற்காக பிரபல ரவுடி உள்பட நான்கு பேரை காவல் துறையினர் கைது செய்தனர்.

  • உலக நன்றியுணர்வு தினம் இன்று... கரோனா காலத்தில் முன்களப் பணியாளர்களுக்கு நன்றியுணர்வுடன் இருப்போம்!

செப்டம்பர் 21ஆம் தேதி உலக நன்றியுணர்வு தினமாகும். நம்மிடம் இருப்பதற்கும், உலகம் ஒன்று கூடி நன்றியைக் கொண்டாடுவதற்கும் நன்றி செலுத்த வேண்டிய நாள் இது. நாம் நன்றியுள்ளவர்களாக இருக்கும் காரியங்கள் குறித்து சிந்திக்கவும், அதற்காக நேரம் ஒதுக்குவதும் நம்மை செழுமைப்படுத்தும். அதுமட்டுமில்லாமல், நம் மகிழ்ச்சியையும் மன ஆரோக்கியத்தையும் இது மேம்படுத்த உதவுகிறது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.