ETV Bharat / state

TN SSLC Result: வெளியானது 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள்; வழக்கம்போல் மாணவியர் தேர்ச்சி அதிகம்!

author img

By

Published : May 19, 2023, 11:17 AM IST

Updated : May 19, 2023, 1:56 PM IST

TN SSLC Result
வெளியானது 10 வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள்!

தமிழ்நாட்டில் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 91.39 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி அடைந்துள்ளனர் என தேர்வுத்துறை இயக்குநரகம் அறிவித்துள்ளது.

வெளியானது 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள்; வழக்கம்போல் மாணவியர் தேர்ச்சி அதிகம்!

சென்னை: 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகளை தேர்வுத்துறை இயக்குநர் சேதுராமவர்மா வெளியிட்டார். அதனை வெளியிட்டு அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது, ’’தமிழ்நாட்டில் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு ஏப்ரல் 6ஆம் தேதி முதல் 20ஆம் தேதி வரை நடைபெற்றது. இந்த பொதுத்தேர்வினை தமிழ்நாட்டில் உள்ள 12,638 மேல்நிலை மற்றும் உயர்நிலைப் பள்ளிகளில் இருந்து 9 லட்சத்து 14 ஆயிரத்து 320 மாணவர்கள் எழுதினர். இவர்களில் சுமார் 4 லட்சத்து 55 ஆயிரத்து 17 மாணவிகளும், 4 லட்சத்து 59 ஆயிரத்து 303 மாணவர்களும் தேர்வை எழுதினர்.

தற்போது அவர்களுக்கான விடைத்தாள்கள் திருத்தப்பட்டு தேர்வு முடிவுகள் இன்று காலை 10 மணிக்கு வெளியிடப்பட்டது. அதில் சுமார் 8 லட்சத்து 35 ஆயிரத்து 614 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளதாகவும்; தேர்ச்சி 91.39 சதவீதமாகவும் உள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.

தேர்ச்சி விகிதம்: மேலும் தேர்வு எழுதிய 4 லட்சத்து 55 ஆயிரத்து 17 மாணவியர்களில் 4 லட்சத்து 30 ஆயிரத்து 710 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். ஆகையால் மாணவிகளின் தேர்ச்சி சதவீதமாக 94.66ஆக உள்ளது. 4 லட்சத்து 59 ஆயிரத்து 303 மாணவர்கள் தேர்வு எழுதியதில், 4 லட்சத்து 4 ஆயிரத்து 904 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்களின் தேர்ச்சி வீதம் 88.16 சதவீதமாக உள்ளது. வழக்கம் போல் மாணவர்களை விட மாணவியர் 6.50 சதவீதம் அதிகமாக தேர்ச்சி பெற்றுள்ளனர்.

கடந்த 2022ஆம் ஆண்டு, மே மாதம் நடந்த பொதுத்தேர்வில் தேர்வு எழுதிய மாணவர்கள் 9 லட்சத்து 12 ஆயிரத்து 620 பேரில் 8 லட்சத்து 21 ஆயிரத்து 994 மாணவர்கள் தேர்ச்சி அடைந்தனர். தேர்ச்சி சதவீதம் 90.07 ஆக இருந்தது.
ஆனால், கடந்தாண்டை விட நடப்பாண்டில் மாணவர்கள் 1.32 சதவீதம் அதிக அளவில் தேர்ச்சிப் பெற்றுள்ளனர். மேலும் தேர்வு எழுதிய பள்ளிகளில் சுமார் 3,718 பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சிப் பெற்றுள்ளன.

100 மதிப்பெண்கள்: தேர்வில் சுமார் 1,026 மாணவர்கள் 100% தேர்ச்சிப் பெற்றுள்ளனர். அதாவது தமிழ்ப் பாடத்தில் 100% மதிப்பெண்களை ஒரு மாணவரும் பெறவில்லை. ஆனால், ஆங்கிலம் பாடத்தில் 89 பேரும், கணிதத்தில் 3,649 பேரும், அறிவியல் பாடத்தில் 3,584 பேரும், சமூக அறிவியல் பாடத்தில் 320 பேரும் 100-க்கு 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். தேர்வு எழுதிய மாற்றுத்திறனாளி மாணவர்கள் 10,808 பேரில் 9 ஆயிரத்து 703 பேர் தேர்ச்சி பெற்று 89.77 % உள்ளது. தேர்வு எழுதிய சிறைவாசிகள் 264 பேரில் 112 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதன் விழுக்காடு 42.42 சதவீதமாக உள்ளது.

மாநில அளவில் பெற்ற இடங்கள்: மாவட்ட அளவில் தேர்வில் முதல் மூன்று இடங்களைப் பெற்ற மாவட்டங்கள், பெரம்பலூர் மாவட்டம் முதலிடத்தையும், சிவகங்கை மாவட்டம் இரண்டாம் இடத்தையும், விருதுநகர் மாவட்டம் மூன்றாம் இடத்தையும் பெற்றுள்ளது. தொடர்ந்து, 10 ஆம் வகுப்பு மாணவர் துணைத் தேர்வு ஜூன் மாதம் 26ஆம் தேதி முதல் நடைபெற உள்ளது.

இந்தத் தேர்வினை எழுதும் மாணவர்கள் மே மாதம் 23ஆம் தேதி முதல் 27ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க தவறுபவர்கள் மே 30 மற்றும் 31ஆம் தேதிகளில் தட்கல் திட்டத்தில் சிறப்புக் கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்கலாம்” என அறிவிக்கப்பட்டுள்ளது.

மாணவர்கள் தங்களது தேர்வு முடிவுகளை www.tnresults.nic.in, www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் பார்க்கலாம். மேலும் மாணவர்களுக்கு தேர்வு முடிவுகள் நேரடியாகவே எஸ்எம்எஸ் (SMS) மூலம் அனுப்பப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: 'புதுச்சேரி CM கப்பம் பெற்றுக்கொண்டு கள்ளச்சாராயத்திற்கு அனுமதி': மாஜி CM குற்றச்சாட்டு!

Last Updated :May 19, 2023, 1:56 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.