ETV Bharat / state

கரோனா பரவல்: மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் ஆலோசனை!

author img

By

Published : Jun 15, 2021, 1:37 PM IST

TN CM MK Stalin
முதலமைச்சர் ஆலோசனை

கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கை தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று ஆலோசனை மேற்கொண்டார்.

சென்னை: தமிழ்நாட்டில் கரோனா பாதிப்பு குறைந்த 27 மாவட்டங்களில், நேற்று முதல் கூடுதல் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு உத்தரவு கடைப்பிடிக்கப்படுகிறது.

இந்நிலையில் இன்று(ஜுன்.15) முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர், திருப்பூர், திருவாரூர் உள்ளிட்ட 24 மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார்.

இந்தக் கூட்டத்தில் சமீபத்தில் நியமிக்கப்பட்ட 24 மாவட்ட ஆட்சியாளர்களில் 22 பேர் நேரடியாக கலந்துகொண்டனர். மீதமுள்ள இரண்டு மாவட்ட ஆட்சியர்கள் காணொலி காட்சி வாயிலாக பங்கேற்றனர்.

இதில், தமிழ்நாட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் தொற்று தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும், மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்தும் புதிதாகப் பொறுப்பேற்றுள்ள மாவட்ட ஆட்சியருக்கு முதலமைச்சர் பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.