ETV Bharat / state

‘சபாநாயகரின் பதில் வேதனை அளிக்கிறது’ - தமிமுன் அன்சாரி

author img

By

Published : Jan 9, 2020, 4:39 PM IST

தமிமுன் அன்சாரி
தமிமுன் அன்சாரி

சென்னை: குடியுரிமை திருத்தச் சட்டம் குறித்து கேட்டால் சபாநாயகர் நகைச்சுவையாகப் பதிலளிப்பது தமக்கு வேதனை அளிப்பதாக சட்டப்பேரவை உறுப்பினர் தமிமுன் அன்சாரி தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு சட்டப்பேரவையில் குடியுரிமை திருத்தச் சட்டம் குறித்து விவாதிக்க அனுமதி மறுக்கப்பட்டதையடுத்து திமுக எம்எல்ஏக்கள் மற்றும் தமிமுன் அன்சாரி ஆகியோர் வெளிநடப்பு செய்தனர்.

தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த தமிமுன் அன்சாரி, ‘குடியுரிமை திருத்தச் சட்டம் குறித்து பேரவையில் விவாதிக்க வேண்டும் என்றும், கேரள அரசு போல் எதிர்த்து தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் எனவும் மனு கொடுத்தோம். ஆனால் கூட்டத்தொடரின் கடைசி நாளான இன்றும் ஆய்வில் உள்ளது என்று சபாநாயகர் சிரித்துக்கொண்டே சொல்கிறார்.

இந்திய மக்கள் அச்சத்தில் உள்ள நிலையில், சபாநாயகர் இவ்வாறு நகைச்சுவையாகக் கூறுவது வருத்தமளிக்கிறது. இதைக் கண்டித்து வெளிநடப்பு செய்துள்ளேன்’ என்றார்.

Intro:Body:சபாநாயகர் குடியுரிமை சட்டத்தை பற்றி கேட்டால் நகைச்சுவையாக பதில் அளிப்பது வருத்தம் அளிக்கிறது - தமிமுன் அன்சாரி.

குடியுரிமை சட்டத்தை பற்றி விவாதிக்க அனுமதி அளிக்காததை கண்டித்து திமுக, மனிதநேய ஜனநாயக கட்சி சட்ட மன்ற உறுப்பினர் வெளிநடப்பு செய்தனர்.

தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த தமிமுன் அன்சாரி, புதிய குடியுரிமை சட்டத்தை பற்றி பேரவையில் விவாதிக்க வேண்டும் என்றும் கேரள அரசு போல் எதிர்த்து தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று மனு கொடுத்தோம். ஆனால் இன்று கடைசி நாளும் ஆய்வில் உள்ளது என்று சபாநாயகர் சிரித்து கொண்டு சொல்கிறார்.

இந்திய மக்கள் அச்சத்தில் உள்ளனர் ஆனால் சபாநாயகர் இவ்வாறு நகைச்சுவையாக கூறுவது வருத்தம் அளிக்கிறது. இதை கண்டித்து வெளிநடப்பு செய்துள்ளேன்.

தொடர்ந்து பேசிய அவர், ஈரான் மீது அமெரிக்க போர் தொடக்கும் எண்ணத்தில் செயல்படுகின்றது. இதனை கண்டிக்கும் வகையில் அமெரிக்கா போரை தூண்டாதே, உலகின் அமைதியை குலைக்காதே என்ற பதகையை இன்று எடுத்து வந்ததாக
தெரிவித்தார்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.