ETV Bharat / state

ரேஷன் கடைகளில் சிறுதானியங்கள் விற்பனை - அரசாணை வெளியீடு

author img

By

Published : Jan 27, 2022, 7:59 PM IST

அரசாணை வெளியீடு
அரசாணை வெளியீடு

நியாய விலைக்கடைகளில் சிறு தானியங்கள் விற்பனை செய்வது தொடர்பாக தமிழ்நாடு அரசு ஆணை வெளியிட்டுள்ளது.

சென்னை: தமிழ்நாட்டில் உள்ள நியாய விலைக்கடைகளில் சிறு தானியங்கள் விற்பனை செய்வது தொடர்பாக தமிழ்நாடு அரசு இன்று (ஜன.27) ஆணை வெளியிட்டுள்ளது. முதல்கட்டமாக சென்னை மற்றும் கோயம்புத்தூர் மாவட்டங்களில் உள்ள நியாய விலைக்கடைகளில் சிறு தானியங்களை சோதனை அடிப்படையில் விற்க தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

கூட்டுறவு சங்கங்கள் மூலமாக விவசாயிகளிடமிருந்து சிறு தானியங்கள் கொள்முதல் செய்யப்பட்டு நியாய விலைக்கடைகள் மூலம் விற்பனை செய்யப்படும். ராகி, கம்பு, திணை, குதிரைவாளி, சாமை, வரகு உள்ளிட்ட சிறு தானியங்களை நியாய விலைக்கடைகள் மூலம் விற்பனை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.

அரசாணை வெளியீடு
அரசாணை வெளியீடு

சிறு தானியங்களின் மதிப்பை கூட்டவும், விவசாயிகளுக்கு நல்ல லாபம் கிடைப்பதை உறுதி செய்யவும் அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. சிறு தானியங்களின் தயாரிப்பை அதிகப்படுத்த, விலை நிர்ணயம் செய்ய மாநில அளவில் கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் தலைமையில் குழு அமைத்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

மாவட்ட ஆட்சியர் தலைமையில் அந்தந்த மாவட்டங்களில் குழு அமைக்கப்படும். சிறு தானியங்கள் அரை கிலோ மற்றும் ஒரு கிலோ பாக்கெட்டுகள் மூலம் விற்பனை செய்யப்பட உள்ளது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: இரவு நேர ஊரடங்கு ரத்து: பள்ளிகள், கல்லூரிகள் திறப்பு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.