தமிழ்நாட்டில்  உயரும் கரோனா: பள்ளிகளின் நிலை என்ன?

author img

By

Published : Sep 3, 2021, 8:49 PM IST

Updated : Sep 3, 2021, 9:09 PM IST

tamilnadu-corona-update

தமிழ்நாட்டில் மேலும் புதிதாக 1,568 நபர்களுக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

சென்னை: தமிழ்நாட்டில் புதியதாக ஒரு லட்சத்து 60 ஆயிரத்து 190 நபர்களுக்கு ஆர்டி-பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதன்மூலம் தமிழ்நாட்டில் இருந்த 1,563 நபர்களுக்கும், கேரளாவிலிருந்து தமிழ்நாட்டிற்கு வந்த ஐந்து நபர்களுக்கும் என மொத்தம் 1,568 நபர்களுக்கு புதிதாக கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் இதுவரை நான்கு கோடியே 18 லட்சத்து 99 ஆயிரத்து 516 நபர்களுக்கு ஆர்டி-பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதனால் தமிழ்நாட்டில் 26 லட்சத்து 19 ஆயிரத்து 511 நபர்கள் கரோனா தொற்று பாதிப்பிற்கு உள்ளாகி இருந்தனர் என்பது தெரியவந்தது.

இவர்களில் தற்போது மருத்துவமனைகள், தனிமைப்படுத்தும் மையங்களில் 16 ஆயிரத்து 370 பேர் சிகிச்சைப் பெற்றுவருகின்றனர். மேலும் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவந்த நோயாளிகளில் குணமடைந்த 1,657 பேர் வீட்டிற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 25 லட்சத்து 68 ஆயிரத்து 161 என உயர்ந்துள்ளது.

மேலும் தனியார் மருத்துவமனையில் மூன்று நோயாளிகளும், அரசு மருத்துவமனையில் 16 நோயாளிகளும் என 19 நோயாளிகள் சிகிச்சைப் பலனின்றி இறந்துள்ளனர். இதன்மூலம் இறந்தவர்கள் எண்ணிக்கை 34 ஆயிரத்து 980 என உயர்ந்துள்ளது.

கோயம்புத்தூரில் நேற்று குறைந்திருந்த தொற்று பாதித்தவர்கள் எண்ணிக்கை மீண்டும் அதிகரித்து புதிதாக 239 பேருக்கு கண்டறியப்பட்டுள்ளது. அதேபோல் சென்னையில் 162 பேருக்கும், ஈரோட்டில் 125 பேருக்கும், தஞ்சாவூரில் 108 பேருக்கும் எனத் தொற்று பாதித்தவர்கள் எண்ணிக்கை அதிக அளவில் உள்ளது.

இந்நிலையில், நாமக்கல் மாவட்டத்தில் நேற்று முன்தினம் (செப்.1) 557 மாணவ மாணவிகளுக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இந்த சோதனையில் மாணிக்கம்பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியில் படிக்கும் 10 ஆம் வகுப்பு மாணவி ஒருவருக்கு தொற்று உறுதியாகியுள்ளது.இதையடுத்து அம்மாணவி அவரது வீட்டிலேயே தனிமைபடுத்தப்பட்டார்.

அதேபோல், அரியலூரில் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் இரண்டு மாணவிகளுக்கும்; கடலூர் மஞ்சக்குப்பம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஒரு ஆசிரியைக்கும் கரோனா உறுதியாகியுள்ளது.

மாவட்ட வாரியாக மொத்த பாதிப்பு

சென்னை - 5,44,648

கோயம்புத்தூர் - 2,36,721

செங்கல்பட்டு -1,65,678

திருவள்ளூர் - 1,16,011

சேலம் - 96,308

திருப்பூர் - 90,570

ஈரோடு - 98,787

மதுரை - 74,035

காஞ்சிபுரம் - 72,953

திருச்சிராப்பள்ளி - 74,552

தஞ்சாவூர் - 71,134

கன்னியாகுமரி - 61,059

கடலூர் - 62,429

தூத்துக்குடி - 55,522

திருநெல்வேலி - 48,482

திருவண்ணாமலை - 53,468

வேலூர் - 48,903

விருதுநகர் - 45,766

தேனி - 43,221

விழுப்புரம் - 44,887

நாமக்கல் - 49,020

ராணிப்பேட்டை - 42,601

கிருஷ்ணகிரி - 42,135

திருவாரூர் - 39,127

திண்டுக்கல் - 32,505

புதுக்கோட்டை - 29,174

திருப்பத்தூர் - 28,622

தென்காசி - 27,117

நீலகிரி - 31,834

கள்ளக்குறிச்சி - 30,171

தருமபுரி - 26,923

கரூர் - 23,143

மயிலாடுதுறை - 22,002

ராமநாதபுரம் - 20,201

நாகப்பட்டினம் - 19,739

சிவகங்கை - 19,418

அரியலூர் - 16,383

பெரம்பலூர் - 11,729

சர்வதேச விமானத்தில் வந்தவர்கள் 1,023

உள்நாட்டு விமானத்தில் வந்தவர்கள் 1,082

ரயில் மூலம் வந்தவர்கள் 428

இதையும் படிங்க : தமிழ்நாட்டில் கணிசமாக உயரும் கரோனா - வடமாநிலத்தில் புதிய வைரஸ்

Last Updated :Sep 3, 2021, 9:09 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.