ETV Bharat / state

வளர்ச்சிக்கு பரந்தூர் விமான நிலையம் அவசியம்; தமிழ்நாடு அரசு

author img

By

Published : Nov 4, 2022, 6:46 PM IST

பரந்தூர் விமான நிலையம் அவசியம்
பரந்தூர் விமான நிலையம் அவசியம்

வளர்ச்சிக்கு பரந்தூர் விமான நிலையம் அவசியம் என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.

சென்னை: தமிழ்நாட்டின் பொருளாதாரத்தை 1 டிரில்லியன் டாலராக உயர்த்திட இலக்கு நிர்ணயித்து அதை நோக்கியச் செயல்பாடுகளை தமிழ்நாடு அரசு மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில் தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், 2030 ஆம் ஆண்டிற்குள் இந்த இலக்கை எட்ட வேண்டுமானால் வளர்ச்சிக்கு உறுதுணையாக பல நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டியுள்ளது. அந்த வரிசையில் மாநிலத் தலைநகரில் இரண்டாவது விமான நிலையம் அமைக்க வேண்டியது அவசியமாக உள்ளது என தெரிவித்துள்ளது.

தமிழ்நாடு தொழில் வளர்ச்சிக்கு கட்டமைப்பு வசதிகளை உருவாக்க வேண்டியது அவசியம். அந்த வகையில் 2 ஆவது விமான நிலைய உருவாக்கம் காலத்தின் கட்டாயம் என தமிழ்நாடு அரசு வலியுறுத்தி உள்ளது.

இதையும் படிங்க: காட்சிகளை மாற்றச் சொன்னாரா சிவகார்த்திகேயன்? மாவீரன் படப்பிடிப்பு நிறுத்தி வைப்பு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.