ETV Bharat / state

காட்சிகளை மாற்றச் சொன்னாரா சிவகார்த்திகேயன்? மாவீரன் படப்பிடிப்பு நிறுத்தி வைப்பு

author img

By

Published : Nov 4, 2022, 5:56 PM IST

பிரின்ஸ் படத்தின் எதிர்மறையான விமர்சனங்கள் காரணமாக மாவீரன் படத்தின் சில காட்சிகளை நடிகர் சிவகார்த்திகேயன் மாற்றச் சொன்னதாக கூறப்படுகிறது. தற்போது மாவீரன் படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மாவீரன் படப்பிடிப்பு நிறுத்தி வைப்பு
மாவீரன் படப்பிடிப்பு நிறுத்தி வைப்பு

சென்னை: சிவகார்த்திகேயன் நடிப்பில் பிரின்ஸ் திரைப்படம் இந்த ஆண்டு தீபாவளிக்கு திரையரங்குகளில் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றது. இதனைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன் தற்போது மண்டேலா படத்தை இயக்கிய மடோன் அஸ்வின் இயக்கத்தில் மாவீரன் என்ற படத்தில் நடித்து வருகிறார்.

மாவீரன் படப்பிடிப்பு நிறுத்தி வைப்பு
மாவீரன் படப்பிடிப்பு நிறுத்தி வைப்பு

இப்படத்தின் படப்பிடிப்பு 40 நாட்கள் நடைபெற்ற நிலையில் இன்னும் 30 நாட்கள் படப்பிடிப்பு மீதம் உள்ளது. இந்த நிலையில் தற்போது மாவீரன் படத்தின் படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

பிரின்ஸ் படத்தின் எதிர்மறையான விமர்சனங்கள் காரணமாக படத்தின் சில காட்சிகளை நடிகர் சிவகார்த்திகேயன் மாற்றச் சொன்னதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக இயக்குநர் மற்றும் சிவகார்த்திகேயன் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் தற்போது படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மழை காரணமாகவும் படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிகிறது. 40 நாட்கள் படப்பிடிப்பு நடத்தப்பட்டுள்ள நிலையில் அடுத்த கட்ட படப்பிடிப்பு வரும் 7 ஆம் தேதி சென்னையில் தொடங்க உள்ளதாக கூறப்படுகிறது.

இதையும் படிங்க: தமிழ்நாட்டில் அடுத்து 3 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.