சென்னை : தொலைத்தொடர்பு உள்கட்டமைப்பு கொள்கை அமைத்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. வலுவான மற்றும் பாதுகாப்பான அதிநவீன தொலைத்தொடர்பு வலையமைப்பை உருவாக்கும் நோக்கில் இந்த கொள்கை உருவாக்கப்பட்டுள்ளது.
கிராமப்புறங்களில் மொபைல் தொலைத்தொடர்பு ஊடுருவலை அதிகரிப்பது, நம்பகமான, மலிவு, உயர்தர தொலைத்தொடர்பு மற்றும் இணைய சேவைகளை வழங்குதல் மற்றும் கிராமப்புறங்களுக்கு அதிவேக மற்றும் உயர்தர பிராட்பேண்ட் அணுகலை வழங்க இந்த கொள்கை உதவும்.
குடிமக்களுக்கு ஏற்ற தொலைத்தொடர்பு தளங்களை ஏற்றுக்கொள்வது இந்த கொள்கையின் நோக்கம். மேலும், ரைட் ஆஃப் வே (RoW) அனுமதி வழங்குவதற்கு விதிக்கப்படும் கட்டணங்களை தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
அண்டர்கிரவுண்ட் டெலிகிராப் உள்கட்டமைப்பை அமைப்பதற்கு ஒவ்வொரு விண்ணப்பத்துக்கும் ஒரு கிலோமீட்டருக்கு ரூபாய் 1,000 திரும்பப்பெற முடியாத கட்டணம் அல்லது அதன் ஒரு பகுதி வரி செலுத்த வேண்டும்.
மொபைல் டவர் நிறுவினால், ஒவ்வொரு விண்ணப்பத்திற்கும் ஒரு முறை திரும்பப்பெறாத கட்டணமாக ரூபாய் 10 ஆயிரம் ஒரு டவருக்கு செலுத்த வேண்டும் என அரசு அறிவித்துள்ளது.
இதையும் படிங்க : Union Budget App: காகிதமில்லா நிதிநிலை அறிக்கை!