ETV Bharat / state

தமிழகத்தில் புதிதாக எத்தனை பேருக்கு கொரோனா?

author img

By

Published : Nov 28, 2022, 10:39 PM IST

கோப்புப்படம்
கோப்புப்படம்

தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் 22 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

சென்னை: தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் 5,923 மாதிரிகள் கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன. அதில் 22 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் மட்டும் புதிதாக 4 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டுள்ளது. இதனால் மாநிலம் முழுவதும் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 244-ஆக உள்ளது.

அதேநேரத்தில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 46 பேர் குணமடைந்துள்ளனர். இதனால், கொரோனாவில் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 35 லட்சத்து 55 ஆயிரத்து 816-ஆக உள்ளது. புதிதாக உயிரிழப்பு ஏதும் பதிவாகவில்லை. இதனால் உயிரிழப்பு எண்ணிக்கை 38,049-ஆக உள்ளது.

இதையும் படிங்க: செக் மோசடி வழக்கில் சிவாஜி மகன், பேரனுக்கு பிடிவாரண்ட்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.