ETV Bharat / state

மறுவாக்குப்பதிவு - பள்ளிகளுக்கு விடுமுறை!

author img

By

Published : Feb 21, 2022, 11:20 AM IST

schools-leave-in-re-polling-wards
schools-leave-in-re-polling-wards

மறுவாக்குப்பதிவு நடைபெறும் வாக்குச்சாவடிகள் உள்ள பகுதிகளில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை: தமிழ்நாட்டில் பிப். 19ஆம் தேதி நகர்புற உள்ளாட்சித் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில், சில வாக்குச்சாவடிகளில் ஏற்பட்ட சில பிரச்சினைகளால் வாக்குப்பதிவு தடைபட்டது.

இந்நிலையில், இன்று (பிப். 21) ஐந்து வார்டுகளில் உள்ள, ஏழு வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு நடைபெறும் என தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதன்படி, இன்று காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

கடைசி ஒரு மணி நேரம் மாலை 5 மணி முதல் 6 மணி வரை கரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்கள் வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், மறுவாக்கு நடைபெறும் பகுதியிலுள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : நாளை வாக்கு எண்ணிக்கை: மதுரையில் தயாராகும் வாக்கு எண்ணிக்கை மையங்கள்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.