ETV Bharat / state

நாளை வாக்கு எண்ணிக்கை: மதுரையில் தயாராகும் வாக்கு எண்ணிக்கை மையங்கள்

author img

By

Published : Feb 21, 2022, 8:19 AM IST

நகர்புற உள்ளாட்சித் தேர்தல் வாக்கு எண்ணிக்கை நாளை நடைபெற உள்ள நிலையில், மதுரையில் வாக்கு எண்ணிக்கை மையங்கள் தயார் நிலையில் உள்ளன.

மதுரையில் தயாராகும் வாக்கு எண்ணிக்கை மையங்கள்
மதுரையில் தயாராகும் வாக்கு எண்ணிக்கை மையங்கள்

மதுரை: நகர்புற உள்ளாட்சித் தேர்தலில் பதிவான வாக்குகள் அனைத்தும் எண்ணப்பட உள்ள நிலையில், மதுரையில் உள்ள வாக்கு எண்ணிக்கை மையங்கள் பல்வேறு ஏற்பாடுகளுடன் தயாராகி வருகின்றன.

தமிழ்நாடு முழுவதும் நகர்புற உள்ளாட்சித் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்துள்ளன. இந்நிலையில், நாளை (பிப். 22) வாக்குகள் எண்ணப்பட உள்ளன.

மதுரை மாவட்டத்தில் உள்ள ஒரு மாநகராட்சி, மூன்று நகராட்சி, ஒன்பது பேரூராட்சிகள் ஆகியவற்றில் வாக்குப்பதிவு நடைபெற்ற நிலையில், மொத்தம் 57.09 விழுக்காடு வாக்குகள் பதிவாகியுள்ளன. இதையடுத்து, அனைத்து வாக்குச்சாவடிகளில் இருந்தும் வாக்குப்பதிவு எந்திரங்கள் சீல் வைக்கப்பட்டு வாக்கு எண்ணிக்கை மையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

மதுரையில் தயாராகும் வாக்கு எண்ணிக்கை மையங்கள்

மண்டல வாரியாக வாக்கு எண்ணிக்கை

நான்கு மண்டலங்களுக்கு உட்பட்ட மதுரை மாநகராட்சியின் 100 வார்டுகளில் பதிவான வாக்குகள் அனைத்தும் மண்டல வாரியாக, மதுரை தமிழ்நாடு பாலிடெக்னிக் ஆண்கள் மற்றும் பெண்கள் கல்லூரி, வக்ஃபு வாரிய கல்லூரி மற்றும் பாத்திமா கல்லூரி ஆகியவற்றில் வாக்குகள் எண்ணப்பட உள்ளன.

இந்நிலையில், மதுரை மாவட்ட ஆட்சியர் அனீஷ் சேகர், வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ள இடங்களைப் பார்வையிட்டுத் தேர்தல் அலுவலர்களுடன் ஆலோசனை நடத்தினார். நகராட்சிகள், பேரூராட்சிகளில் பதிவான வாக்குகள் அனைத்தும் அந்தந்த பகுதிகளில் உள்ள பள்ளி, கல்லூரிகளில் நாளை (பிப். 22) எண்ணப்பட உள்ளன.

இதையும் படிங்க: வாக்குச்சாவடிக்குள் புகுந்து ரகளை: திமுகவினர் 4 பேர் மீது வழக்குப்பதிவு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.