ETV Bharat / state

இலங்கைக்கு அனுப்பி வைக்கக்கோரி சாந்தன் மனு: மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க நீதிமன்றம் ஆணை!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 17, 2023, 9:52 PM IST

Etv Bharat
Etv Bharat

Santhan repatriation petition in MHC: இலங்கைக்கு திரும்ப அனுப்பி வைக்கக் கோரி, ராஜீவ் காந்தி கொலை வழக்கில், உச்ச நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்ட சாந்தன் தாக்கல் செய்த மனுவுக்கு மத்திய, மாநில அரசு பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை: முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை கைதிகளாக இருந்த நளினி, முருகன், சாந்தன் உள்பட ஏழு பேரை விடுதலை செய்து, கடந்த 2022ஆம் ஆண்டு நவம்பர் மாதம் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது.

இதையடுத்து விடுதலை செய்யப்பட்ட இலங்கை நாட்டைச் சேர்ந்த முருகன், சாந்தன் உள்ளிட்டோர் திருச்சி அகதிகள் முகாமில் அடைக்கப்பட்டுள்ளனர். திருச்சி அகதிகள் முகாமில் அடைக்கப்பட்டுள்ள சாந்தன், தன்னை இலங்கைக்கு அனுப்பி வைக்க உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

அந்த மனுவில், 'விடுதலைக்குப் பின், கடந்த 10 மாதங்களாக முகாமில் அடைத்து வைத்திருப்பது அரசியல் சட்டத்துக்கு புறம்பானது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையின் யாழ்ப்பாணத்தில் வசிக்கும் தனது 75 வயதான தாய் நோய் வாய்ப்பட்டுள்ளதாகவும், அவரை கவனிப்பதற்காக தன்னை இலங்கைக்கு அனுப்பி வைக்கக் கோரி செப்டம்பர் 11ஆம் தேதி மத்திய அரசுக்கு மனு அனுப்பியும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை' எனவும் அந்த மனுவில் தெரிவித்திருக்கிறார்.

இந்த மனுவை இன்று (அக்.17) விசாரித்த நீதிபதிகள் கிருஷ்ணகுமார் மற்றும் தனபால் அமர்வு, இரண்டு வாரங்களில் சாந்தனின் மனுவுக்கு பதிலளிக்கும்படி, மத்திய - மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டுள்ளது.

இதையும் படிங்க: லியோ படத்திற்கான அதிகாலை 4 மணி சிறப்பு காட்சிக்கு அனுமதி வழங்க முடியாது - உயர் நீதிமன்றம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.