ETV Bharat / state

முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணி எழுத்து தேர்வு எப்போது?

author img

By

Published : Sep 9, 2021, 9:45 PM IST

தேர்வு தேதி அறிவிப்பு
தேர்வு தேதி அறிவிப்பு

தமிழ்நாட்டில் அரசு மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள 2 ஆயிரத்து 207 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான எழுத்து தேர்வு நவம்பர் மாதம் 13ஆம் தேதி முதல் 15ஆம் தேதி வரை ஆன்லைன் மூலம் நடைபெறுகிறது.

சென்னை : தமிழ்நாட்டில் அரசு மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள 2 ஆயிரத்து 207 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான எழுத்து தேர்வு நவம்பர் மாதம் 13ஆம் தேதி முதல் 15ஆம் தேதி வரை ஆன்லைன் மூலம் நடைபெறுகிறது. இந்த தேர்வினை எழுத செப்டம்பர் 16ஆம் தேதி முதல் அக்டோபர் 17ஆம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக, ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ”முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள், உடற்கல்வி இயக்குனர் நிலை 1, கம்ப்யூட்டர் பயிற்றுநர்கள் நிலை 1 ஆகிய பள்ளிக் கல்வித் துறையில் காலியாக உள்ள 2 ஆயிரத்து 207 பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்படுகிறது.

மேலும் ஒவ்வொரு பாட வாரியாக எத்தனை ஆசிரியர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என்ற விவரமும், துறை வாரியாக எத்தனை ஆசிரியர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என்ற பட்டியலும் வெளிப்படையாக அறிவிக்கப்பட்டுள்ளது.

69 விழுக்காடு இட ஒதுக்கீட்டை பின்பற்றி காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும். முதல் முறையாக அரசு உத்தரவின் அடிப்படையில் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் வன்னியர்களுக்கு 10.5 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் பெண்களுக்கு அரசு விதிகளின்படி 30 விழுக்காடு இட ஒதுக்கீடு, தமிழ்வழியில் படித்தவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் 20 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்கப்படவுள்ளது. பத்தாம் வகுப்பு, பன்னிரண்டாம் வகுப்பு, இளங்கலை பட்டப்படிப்பு, முதுகலை பட்டப்படிப்பு, பிஎட் பட்டப்படிப்பு ஆகியவற்றை தமிழ் வழியில் படித்திருக்க வேண்டும் என்ற அரசின் உத்தரவு கடைபிடிக்கப்படும்.

மேலும் அரசு விதிகளின்படி கல்வித் தகுதிகளும் வெளியிடப்பட்டுள்ளன.

  • தேர்வுக் கட்டணமாக 500 ரூபாய் செலுத்த வேண்டும் எனவும், எஸ்சி எஸ்டி வகுப்பினர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் 250 ரூபாய் கட்டினால் போதுமானது என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தேர்வு கட்டணத்தை ஆன்லைன் மூலம் மட்டுமே செலுத்த வேண்டும்.
  • விண்ணப்ப பதிவு உட்பட அனைத்து நடைமுறைகளும் ஆன்லைன் மூலம் மட்டுமே நடைபெறும். விண்ணப்பங்கள் அச்சிடப்பட்டு வழங்கப்பட மாட்டாது விண்ணப்பங்களை அனுப்பினால் ஆசிரியர் தேர்வு வாரியம் ஏற்றுக் கொள்ளாது.
  • ஆன்-லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் எனவும், விண்ணப்பிக்கும் பொழுது தெரிவிக்கும் அனைத்து சான்றிதழ்களையும் சரிபார்ப்பின் போது காண்பிக்க வேண்டும்.
  • மேலும் எழுத்துத் தேர்வில் 150 மதிப்பெண்களுக்கு நடைபெறும் எனவும், அவற்றில் 50 விழுக்காடு மதிப்பெண்களை சிறுவர்கள் பெற்றால் மட்டுமே தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்படுவார்கள். அருந்ததியர் ஆதிதிராவிடர் வகுப்பினர் 45 விழுக்காடு மதிப்பெண்களும், பழங்குடியினர் 40 விழுக்காடு மதிப்பெண்கள் பெற்றாலும் தகுதி பெற்றதாக அறிவிக்கப்படுவார்கள்.
  • எழுத்துத்தேர்வு கம்ப்யூட்டர் மூலம் ஆன்லைன் முறையில் மட்டுமே நடைபெறும்.

விண்ணப்பங்களை www.trb.tn.nic.in என்ற இணையதளத்தில் பதிவு செய்யலாம். இதன் மூலம் அனைத்து விவரங்களையும் தெரிந்து கொள்ளலாம் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.

இதையும் படிங்க : பள்ளிகளுக்கு புத்தகங்களை தேர்வு செய்ய புதிய முறை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.