ஸ்வீட் கடை உரிமையாளர் வீட்டில் ரூ.10 லட்சம் நகை, பணம் திருட்டு; திருடிய நபருக்குப் போலீசார் வலைவீச்சு!

author img

By

Published : Sep 15, 2022, 2:57 PM IST

ஸ்வீட் கடை உரிமையாளர் வீட்டில் ரூ.10 லட்சம் நகை, பணம் திருட்டு; மர்மநபருக்கு போலீசார் வலைவீச்சு!

சென்னை அருகே ஸ்வீட் கடை உரிமையாளர் வீட்டில் ரூ.10 லட்சம் பணம், பல லட்சம் தங்கநகைகள், திருடிச்சென்ற நபரை போலீசார் வலைவீசித் தேடிவருகின்றனர்.

சென்னை ராஜா அண்ணாமலைபுரம், கிருஷ்ணாபுரி பிஷப் கார்டன் பிரிவு பகுதியைச்சேர்ந்தவர், பன்சிதர் குப்தா. இவர் பாரிமுனையில் ஸ்வீட் கடை நடத்தி வருகிறார். இந்த நிலையில் நேற்று காலை வழக்கம் போல பன்சிதர் வீட்டிலிருந்து ஸ்வீட் கடைக்குச்சென்றுள்ளார். பின்பு இவரது தாய் மஞ்சு குப்தா வீட்டின் மேல் தளத்தை பூட்டிவிட்டு கடைக்குச் சென்றுள்ளார்.

இதையடுத்து மாலை 5 மணியளவில் வீட்டிற்குத் திரும்பியபோது முதல் தளத்தின் பூட்டு உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த ரூ.10 லட்சம் பணம், 10 தங்க நாணயங்கள், பல லட்சம் மதிப்புள்ள தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

உடனடியாக இந்த கொள்ளை குறித்து பன்சிதர் அபிராமபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதில் கடந்த 2 மாதங்களாக நேபாளத்தைச்சேர்ந்த திபேந்திரா ஆஜி(20) என்பவர், தங்களது வீட்டில் தங்கி ஹவுஸ் கீப்பிங் வேலை செய்து வந்ததாகவும், வீட்டைப் பூட்டி செல்லும்போது திபேந்திரா கீழ்தளத்தில் அறையில் தனியாக இருந்ததாகவும், பின்பு மீண்டும் வந்தபோது திபேந்திரா காணவில்லை எனவும்; இதனால் அவர் மீது சந்தேகம் இருப்பதாகவும் புகாரில் குறிப்பிட்டுள்ளார்.

இந்தப் புகாரின் அடிப்படையில் அபிராமபுரம் போலீசார் சம்பவ இடத்திலிருந்த சிசிடிவி காட்சிகளைக் கைப்பற்றி, தப்பியோடிய ஊழியர் திபேந்திரா ஆஜியைத் தேடி வருகின்றனர்.

இதையும் படிங்க:நூற்றுக்கணக்கான சிம்கார்டுகள்...மோசடிக்கு நவீன சிம் பாக்ஸ்...ஒடிசாவில் மோசடி கும்பல் கைது

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.