ETV Bharat / state

பெட்ரோல் குண்டு வீசப்பட்டதை தீவிரவாத செயலாக பார்ப்பதாக ஆளுநர் மாளிகை அதிகாரிகள் தகவல்!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 25, 2023, 9:10 PM IST

Etv Bharat
Etv Bharat

Petrol Bomb Thrown on TN Governors House:தமிழ்நாடு ஆளுநர் மாளிகை நுழைவு வாயிலில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டதை தீவிரவாத செயலாக பார்ப்பதாக ஆளுநர் மாளிகை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சென்னை: கிண்டி 'ஆளுநர் மாளிகை' நுழைவு வாயிலில் இன்று (அக்.25) மாலை இரண்டு பெட்ரோல் குண்டுகளை வீசிய தேனாம்பேட்டை சரித்திர பதிவேடு ரவுடி வினோத்தை பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் ஆளுநர் மாளிகை சார்பாக இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இரண்டு பெட்ரோல் குண்டுகள் ஆளுநர் மாளிகை நோக்கி வீசப்பட்டு உள்ளதாகவும் பெட்ரோல் குண்டு ஆளுநர் மாளிகை முன்பு வீசப்பட்ட சம்பவத்தை தீவிரவாத செயலாக பார்ப்பதாகவும் ஆளுநர் மாளிகை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவ இடத்திற்கு தடவியல் துறை நிபுணர்கள் சென்று ஆய்வுகள் மேற்கொண்டு வருகின்றனர். கண்ணாடி பாட்டில்கள் மண் உள்ளிட்டவைகளை எடுத்து சென்று அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். என்ன எரிபொருள் பயன்படுத்தி உள்ளார்? என்பதை உறுதி செய்வது தொடர்பாக சோதனை நடைபெற்று வருகிறது. மேலும் இந்த சம்பவத்தில் வினோத் மட்டும்தான் ஈடுபட்டரா? அல்லது இதன் பின்புலத்தில் வேறு யாராவது உள்ளார்களா? என்ற கோணத்தில் தொடர்ந்து போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சரித்திர பதிவேடு குற்றவாளியாக இருக்கும் வினோத் ஏற்கனவே பாஜக தலைமை அலுவலகம் கமலாலயம், மதுபான கடை, தேனாம்பேட்டை காவல் நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் பெட்ரோல் குண்டு வீசி கைதாகி சிறைக்கு சென்றவர். தற்போது கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு தான், இவர் சிறையில் இருந்து வெளியே வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் தான், மீண்டும் ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவத்தில் வினோத் ஈடுபட்டுள்ளார் என்பது தெரியவந்துள்ளது.

நீட் தேர்வுக்கு எதிராக இந்த சம்பவத்தில் ஈடுபட்டதாக போலீசார் வாக்குமூலத்தில் வினோத் அளித்துள்ளார். இவர் ஏற்கனவே, பாஜக தலைமை அலுவலகத்தின் மீது பெட்ரோல் குண்டு வீசியபோதும் இதே காரணத்தை தான் போலீசார் இடம் தெரிவித்திருந்தார். மேலும், நீண்ட காலமாக சிறையில் இருக்கும் கைதிகளை நன்னடத்தை அடிப்படையில் வெளியே விட வேண்டும் எனவும் அவர் போலீசார் வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார். இது குறித்து தொடர்ந்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீசிய பிரபல ரவுடி.. யார் இந்த கருக்கா வினோத்?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.