ETV Bharat / state

வட மாநிலத் தொழிலாளர்கள் போர்வையில் வங்கதேசத்தினர் ஊடுருவலா? - சென்னையில் NIA அதிரடி ரெய்டு!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 8, 2023, 10:59 AM IST

nia-conducted-raid-in-several-areas-in-chennai
nia-conducted-raid-in-several-areas-in-chennai

NIA Raid: வடமாநிலத் தொழிலாளர்கள் போர்வையில் வங்கதேசத்தைச் சேர்ந்தவர்கள் சட்டவிரோதமாக இந்தியாவிற்குள் ஊடுருவல் என என்.ஐ.ஏ அதிகாரிகள் வழக்குப் பதிவு செய்து சென்னையில் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

சென்னை: வங்கதேச நாட்டைச் சேர்ந்தவர்கள் வட மாநிலத் தொழிலாளர்கள் போர்வையில் இந்தியாவிற்குள் ஊடுருவதாக கிடைக்கப் பெற்ற தகவலின் அடிப்படையில், பல்வேறு மாநிலங்களில் என்.ஐ.ஏ அதிகாரிகள் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில், சென்னையிலும் பல்வேறு இடங்களில் வட மாநிலத் தொழிலாளர்கள் போர்வையில் வங்கதேசத்தைச் சேர்ந்தவர்கள் ஊடுருவி இருப்பதாக தகவல்கள் கிடைத்ததன் அடிப்படையில், இன்று (நவ.8) காலை முதல் என்ஐஏ அதிகாரிகள் சென்னையில் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

சென்னை புறநகர் பகுதிகளான பெரும்பாக்கம், பள்ளிக்கரணை, படப்பை உள்ளிட்ட மூன்று இடங்களில் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை செய்து வருகின்றனர். அதேபோல், இந்த வழக்கு தொடர்பாக புதுச்சேரி மாநிலத்தில் ஒரு இடத்திலும், மற்ற மாநிலங்களிலும் இந்த சோதனை நடைபெறுவதாக கூறப்படுகிறது.

மேலும், இந்த வழக்கு தொடர்பாக சென்னையில் திரிபுரா மாநிலத்தைச் சேர்ந்த ஒருவரைப் பிடித்து என்.ஐ.ஏ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் கோவிந்தாபுரம் பகுதியில் தங்கி இருந்த ஒருவரைப் பிடித்தும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

வங்கதேச நாட்டைச் சேர்ந்தவர்கள் வேலைக்காக சட்ட விரோதமாக இந்தியாவிற்குள் அழைத்து வரப்படுகிறார்களா அல்லது வேறு ஏதாவது நோக்கத்துடன் அழைத்து வரப்படுகிறார்களா என்ற கோணத்தில் என்.ஐ.ஏ அதிகாரிகள் இந்த சோதனையை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழா; அமைச்சர் பொன்முடி புறக்கணிப்பு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.