ETV Bharat / state

குரூப் 4 எழுத்து தேர்வு - பெண்கள் அதிக எண்ணிக்கையில் விண்ணப்பம்

author img

By

Published : Apr 30, 2022, 8:16 AM IST

குரூப் 4 எழுத்து தேர்விற்கு ஆண்களைவிட பெண்கள் அதிக அளவில் விண்ணப்பம்!
குரூப் 4 எழுத்து தேர்விற்கு ஆண்களைவிட பெண்கள் அதிக அளவில் விண்ணப்பம்!

குரூப் 4 தேர்வுக்கு ஆண்களை விட பெண்கள் அதிகம் எண்ணிக்கையில் விண்ணப்பித்துள்ளனர்.

சென்னை: நேற்று நள்ளிரவு 12 மணியுடன் குரூப் 4 தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நிறைவு பெற்ற நிலையில் மொத்தம் 21.85,328 பேர் விண்ணப்பம். மார்ச் 30ம் தேதி முதல் நேற்று இரவு 12 மணி வரை 21 லட்சத்து 85ஆயிரத்து 328 பேர் விண்ணப்பித்துள்ளனர் என டி.என்.பிஸ்.சி தகவல். 7 ஆயிரத்து 301 காலிப்பணியிடங்களுக்கான தேர்வு நடைபெறவுள்ளது.

கடைசி நாளான நேற்று ஒரே நாளில் 3 லட்சத்திற்கும் மேற்பட்டோர் விண்ணப்பம் செய்துள்ளனர். மொத்தமாக 21 லட்சத்து 85 ஆயிரம் 328 பேர் குரூப் 4 தேர்வுக்கு விண்ணப்பத்துள்ளனர். இதில், ஆண்கள் - 9 லட்சத்து 26 ஆயிரத்து 583 பேர், பெண்கள் - 12 லட்சத்து 58 ஆயிரத்து 616 பேர், மூன்றாம் பாலினத்தவர்கள் - 129 பேர் விண்ணப்பம் செய்துள்ளனர்.

இதையும் படிங்க:TNPSC Group 4: குரூப் 4 தேர்வுக்கு தமிழ் மொழி கட்டாயம்: 2022 ஆம் ஆண்டுக்கு பிறகு நடைமுறைப்படுத்த கோரிக்கை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.