ETV Bharat / state

கோயில் சிலைகளை பாதுகாக்க அரசின் நடவடிக்கை என்ன? - அறிக்கை அளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 15, 2023, 9:58 PM IST

Etv Bharat
Etv Bharat

Strong Room in tamil nadu temples: சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின்படி, தமிழகத்தில் எத்தனை கோயில்களில் சிலைகள் பாதுகாப்புக்காக ஸ்ட்ராங்க் ரூம்கள் (Strong rooms) கட்டப்பட்டுள்ளன என்பது குறித்து இந்து சமய அறநிலையத்துறை அறிக்கை அளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை: தமிழகத்தில் கோயில்கள் பாதுகாப்பு தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன் வந்து வழக்கு விசாரணைக்கு எடுத்து, 75 உத்தரவுகளை பிறப்பித்து இருந்தது. அந்த உத்தரவில், கோயில் சிலைகளை பாதுகாக்க கோயில்களில் ஸ்ட்ராங்க் ரூம்கள் (Strong rooms) கட்டப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இந்த உத்தரவுகளை அமல்படுத்தியது தொடர்பாக, நீதிபதிகள் மகாதேவன் மற்றும் ஆதிகேசவலு அமர்வில் இன்று (டிச.15) மனு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, ஆயிரத்து 824 கோயில்களில் ஸ்ட்ராங்க் ரூம்கள் கட்ட அரசு ஒப்புதல் வழங்கி உள்ளதாகவும், 263 கோயில்களில் ஸ்ட்ராங்க் ரூம்கள் கட்டப்பட்டு விட்டதாகவும், இந்து சமய அறநிலையத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, எத்தனை கோயில்களில் ஸ்ட்ராங்க் ரூம்கள் கட்டப்பட்டுள்ளன? இன்னும் எத்தனை கோயில்களில் ஸ்ட்ராங்க் ரூம்கள் கட்டப்பட வேண்டியுள்ளது? அதற்கு எவ்வளவு காலமாகும்? என்பன உள்ளிட்டவைகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய இந்து சமய அறநிலையத்துறைக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், இவ்வழக்கு விசாரணையை டிசம்பர் 22ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

இப்பணிக்கான நிதி எவ்வளவு தெரியுமா?: கடந்த 2018ஆம் ஆண்டு, கோயில்களில் ஸ்ட்ராங் ரூம் கட்ட ரூ.308 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதற்கிடையே, வழக்கு ஒன்றில் ஒவ்வொரு சிலையும் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பிலானது எனவும் ஆயிரக்கணக்கான கோயில்கள் உள்ள நிலையில் அத்தனை சிலைகளுக்கும் ஒரு ஸ்ட்ராங் ரூம் போதுமா? எனவும் கேள்வி எழுப்பியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: வாடகை தாரருக்கும் வீட்டு உரிமையாளருக்கும் பிரச்சினை; காவல் ஆய்வாளர் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.