ETV Bharat / state

கூவத்தில் ஆண் சடலம் மீட்பு - சந்தேக மரணமாக வழக்குப்பதிவு!

author img

By

Published : Oct 10, 2019, 12:05 AM IST

கூவத்தில் ஆண் சடலம் மீட்பு

சென்னை: சென்ட்ரல் ரயில் நிலையம் அருகே அழுகிய நிலையில் 35 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பெரியமேடு காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தின் பின்புறம் உள்ள கூவத்தில் ஆண் சடலம் ஒன்று அழுகிய நிலையில் மரத்தில் தொங்கிக் கொண்டிருந்தது. இருப்புப்பாதை அலுவலர்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில் பெரியமேடு காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து உடலைக் கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்விற்காக அனுப்பி வைத்தனர்.

இது குறித்த விசரணையில் ரயில்வே இருப்புப் பாதை காவலர்கள், பெரியமேடு காவல் துறையினர் இடையே குழப்பம் இருந்தது.

பின்னர் பெரியமேடு காவல் துறையினர் சந்தேக மரணம் என்ற அடிப்படையில் வழக்குப் பதிவு செய்தனர். உயிரிழந்தவரின் கைகள் முன்பக்கம் கட்டப்பட்ட நிலையில் இருந்ததால் கொலையாக இருக்கலாம் என்ற அடிப்படையில் முதல்கட்ட விசாரணை நடைபெற்று வருகிறது.
இதையும் படிங்க: ஆந்திராவில், நக்ஸல் உடையணிந்த விவசாயி கைது!

Intro:Body:சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் அருகே அழுகிய நிலையில் அடையாளம் தெரியாத 35 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தின் பின்புறம் இருப்பு பாதைக்கு அருகேயுள்ள கூவத்தில் ஆண் சடலம் ஒன்று அழுகிய நிலையில் கிடந்துள்ளது. இருப்புப்பாதை பணியாளர்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில் பெரியமேடு போலீசார் முதற்கட்டமாக விசாரணை நடத்தினர்.இருப்புப் பாதையில் சடலமானது கிடைத்துள்ளதால் ரயில்வே இருப்புப் பாதை காவலர்கள் விசாரணை நடத்துவதா அல்லது பெரியமேடு போலீசார் விசாரணை நடத்துவதா என்று குழப்பம் நிலவியது.பின் பெரியமேடு போலீசார் சந்தேக மரணம் என்ற அடிப்படையில் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

இறந்தவரின் கைகள் முன்பக்கம் கட்டப்பட்ட நிலையில் இறந்து கிடப்பதால், கொலையாக இருக்கலாம் என்ற அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். .Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.