ETV Bharat / state

விரும்பும் மொழியை மூன்றாவதாக கற்பிப்பதை எதிர்க்கவில்லை - அமைச்சர் பொன்முடி

author img

By

Published : May 15, 2022, 6:46 PM IST

Updated : May 15, 2022, 7:21 PM IST

சென்னையில் நடைபெற்ற தேசிய கல்விக்கொள்கை 2020ஐ நிராகரிப்போம் மாநாட்டில் அமைச்சர் பொன்முடி எங்கள் மீது இந்தி திணிப்பு கூடாது; அதே நேரத்தில் விரும்பும் மொழியை மூன்றாவதாக கற்பிப்பதை எதிர்க்கவில்லை என முழுக்க முழுக்க ஆங்கிலத்தில் பேசும் வீடியோ இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது. மேலும் கேரளாவில் பின்பற்றப்படும் மும்மொழிக் கொள்கை மாற்றப்பட வேண்டும் எனவும் அப்போது அவர் தெரிவித்தார்.

அமைச்சர் பொன்முடி
அமைச்சர் பொன்முடி

சென்னை: தியாகராய நகரில் உள்ள சர் பிட்டி தியாகராயர் கலையரங்கத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாணவர் அமைப்பான அனைத்திந்திய மாணவர் பெருமன்றத்தின் சார்பில் 'தேசிய கல்விக் கொள்கை 2020ஐ நிராகரிப்போம்' என்ற தலைப்பில் மாநாடு நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றிய உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, தேசியக் கல்விக்கொள்கைக்கு எதிராக ஆங்கிலத்தில் அடுக்கடுக்காக விமர்சனங்கள் வைத்தார்.

புதிய கல்விக்கொள்கையை அமல்படுத்துவது கூட்டாட்சிக்கு எதிரானது எனவும் மாநில உரிமைக்கு எதிரானது எனவும் கூறினார். புதியக் கல்வி கொள்கையை எதிர்க்க மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று குறிப்பிட்டு, பேசிய அவர் தமிழ்நாட்டில் இருமொழிக்கொள்கை கடைபிடிக்கப்பட்டு வரும் நிலையில், 3ஆவது மொழியை கற்க எதிர்ப்புத்தெரிவிக்கவில்லை எனவும்; ஆனால் மொழி திணிப்பை எதிர்ப்பதாகவும் தெரிவித்தார்.

எங்கள் மீது இந்தி திணிப்பு கூடாது - அமைச்சர் பொன்முடி

மேலும் அண்டை மாநிலமான கேரளாவில் உள்ள மலையாளம் , ஆங்கிலம் , இந்தி என்ற மும்மொழிக் கொள்கையை மாற்ற வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தார்.


இதையும் படிங்க: இந்தி பேசுபவர்கள் பானிபூரி விற்கிறார்கள்- ஆளுநரை வைத்துக்கொண்டே பேசிய பொன்முடி

Last Updated : May 15, 2022, 7:21 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.