ETV Bharat / state

கிராம சபை கூட்டம், வெறும் பேச்சு கூட்டமாக இருக்கக்கூடாது- கமல்ஹாசன்

author img

By

Published : Apr 25, 2022, 9:35 AM IST

’ஆளுநர் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை நிறைவேற்றாமல் விளையாடிக் கொண்டிருக்கிறார்’ - கமல்ஹாசன்
’ஆளுநர் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை நிறைவேற்றாமல் விளையாடிக் கொண்டிருக்கிறார்’ - கமல்ஹாசன்

கிராம சபை வெறும் பேச்சுக் கூட்டமாக இருக்கக் கூடாது, அதன் செயல்பாடுகளை நடைமுறைப்படுத்த வேண்டும் என மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

சென்னை: தேசிய கிராம சபை தினத்தை முன்னிட்டு மக்கள் நீதி மய்யத்தின் நிர்வாகிகள் தொண்டர்கள் மற்றும் பொதுமக்களிடம் காணொளி காட்சி வாயிலாக அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் உரையாற்றினார். நிகழ்வில் கமல்ஹாசன் முன்னிலையில் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கிராம சபை தின உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.

உறவும் தேவையில்லை, பகையும் தேவையில்லை..!: தொடர்ந்து உரையாற்றிய கமல்ஹாசன், "மக்கள் நீதி மய்யம் கிராம சபையை மக்களிடையே கொண்டு சென்றது, எங்கள் முயற்சி மற்றும் மக்கள் முயற்சியின் காரணமாக வருடத்திற்கு 6 முறை கிராமசபை நடத்தப்படும் என அரசு அறிவித்துள்ளது வரவேற்கத்தக்கது. ஆனால் 6000 கிராம சபை கூட்டம் நடத்தினாலும் அதில் செயல்பாடு இருக்க வேண்டும்.

நேர்மையாக கிராமசபை நடத்தப்படுகிறதா, அதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் செயல்படுத்தப்படுகிறதா என்பதை அரசு கவனிக்க வேண்டும். பல்வேறு கட்சிகள் இருந்தாலும் பல்வேறு சித்தாந்தங்கள் இருந்தாலும் அனைவரும் மக்கள் நலம் என்ற பாதையில் செல்ல வேண்டும். அரசியலில் உறவும் தேவை இல்லை, பகையும் தேவையில்லை.

’ஆளுநர் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை நிறைவேற்றாமல் விளையாடிக் கொண்டிருக்கிறார்’ - கமல்ஹாசன்

ஜனநாயகம் எனும் பிரம்மை: கிராம சபை நடத்தும் உறுப்பினருக்கு அமரும்படி ஐந்து மடங்கு உயர்த்திக் கொடுத்து உள்ளனர், அண்டை மாநிலத்தில் பல்லாயிரம் மடங்கு உயர்த்தி கொடுத்துள்ளனர். அங்கே பணிகள் சரியாக நடந்து கொண்டிருக்கிறது. இங்கேயும் பணிகள் நடக்கவேண்டும், உயர்த்தி கொடுத்தது மக்களுக்கு தெரிய வந்தால் அவர்கள் கேள்வி கேட்பார்கள். இவ்வளவு ஊதியம் பெற்றும் பணி ஏன் செய்யவில்லை என்று.

நல்லது நடக்கும் பொழுது பாராட்டவும் தவறுகள் செய்யும் போது விமர்சிப்பதும் எங்கள் நோக்கம். நாட்டில் பல்வேறு பிரச்சனைகள் நடந்து கொண்ட இருக்கிறது, நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை நிறைவேற்றாமல் ஆளுநர் விளையாடிக் கொண்டிருக்கிறார் அதையெல்லாம் மக்கள் நீதி மய்யம் சொல்லவில்லை, இதற்கு என்ன காரணம். இத்தனை ஆணவத்திற்கும் என்ன காரணம் என்று யோசித்துப் பார்த்தால் ”ஜனநாயகம்” என்று ஒன்று இருப்பது போல பிரம்மை இருக்கிறது.

என்னை பாஜகவின் B Team என்றார்கள்..,: ஜனம் தனியாகவும் நாயகம் தனியாகவும் நடந்து கொண்டிருக்கிறது. அதிகாரம் ஒரு சார்பாக உள்ளது அவர்கள் மக்களை விளையாட்டு பொம்மையாக கருதுகின்றனர். அதிகாரம் மக்கள் கையில் வந்தால் தான் ஜனநாயகம் இருக்கும். கிராம சபை வெறும் பேச்சுக் கூட்டமாவே இருக்கக் கூடாது, அதற்கான செயல்பாடுகளை நடைமுறைப்படுத்த வேண்டும்.

நதிகளை சாக்கடையாக மாற்றிவிட்டு சாலை எல்லாம் சாக்கடை ஓடும் வழித்தடமாக மாற்றி விட்டு மக்களின் வாழ்க்கையை விளையாட்டாக மாற்றிவிட்டார்கள். என்னை பாஜகவின் B team என்றார்கள். ஆனால் என்னை விமர்சனம் செய்தவர்கள் தான் தற்போது பாஜகவின் B team ஆக உள்ளனர்" என தெரிவித்தார்.

இதையும் படிங்க: ஜம்மு-காஷ்மீரில் குண்டு வெடிப்பு?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.