சென்னை: நாடு முழுவதும் வரும் ஆகஸ்ட் 15ஆம் தேதி 75ஆம் ஆண்டு சுதந்திர தினத்தை கொண்டாடுவதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
தமிழ்நாட்டில் ஆண்டுதோறும் சுதந்திர தின கொண்டாட்டங்கள் நடைபெறுவது வழக்கம், காவலர்களின் அணிவகுப்பு மற்றும் விருது வழங்கும் நிகழ்ச்சிகள் நடைபெறும். இந்தாண்டு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இரண்டாவது முறையாக கோட்டை கொத்தளத்தில் கொடியேற்றவுள்ளார்.
சென்னை ராஜாஜி சாலையில் நடத்தப்படும் சுதந்திர தின விழாவைக்காண ஆண்டுதோறும் பொதுமக்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டு வந்த நிலையில், கடந்த இரண்டு ஆண்டுகளாக கரோனா தொற்று காரணமாக பொதுமக்கள் பங்கேற்க தடை விதிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் இந்தாண்டு மீண்டும் சுதந்திர தின கொண்டாட்டங்களைக் கண்டு ரசிக்க பொதுமக்களுக்கு தமிழ்நாடு அரசு அனுமதியளிக்க உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. பொதுமக்கள் முகக்கவசம் அணிந்து பங்கேற்க வேண்டும் என்றும்; முதியவர்கள், குழந்தைகளை அழைத்து வர வேண்டாம் என்றும் சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இதையும் படிங்க: வீட்டுவசதி வாரியத்தால் கட்டப்பட்டுள்ள கட்டடங்களை முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைத்தார்!