ETV Bharat / state

கரோனா: சென்னையில் குணமடைந்தோரின் எண்ணிக்கை 97% ஆக அதிகரிப்பு

author img

By

Published : Dec 29, 2020, 2:22 PM IST

Increase in the number of corona cured people in Chennai rise to 97%
Increase in the number of corona cured people in Chennai rise to 97%

சென்னை: கரோனா வைரசிலிருந்து குணமடைந்தோரின் விழுக்காடு 97ஆக அதிகரித்துள்ளது என மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

சென்னையில் நாளுக்கு நாள் கரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை குறைந்துவருகிறது. சில மண்டலங்களில் மட்டும் தொற்றுப் பரவல் சற்று அதிகரிப்பதாகத் தெரிகிறது. அவற்றைக் குறைக்க அந்தந்த மண்டலங்களில் அதிக மருத்துவ முகாம்களும், விழிப்புணர்வும் மாநகராட்சி நிர்வாகம் சார்பில் நடத்தப்படுகின்றன.

கரோனா வைரசிலிருந்து குணமடைந்தோரின் விழுக்காடும் 97 ஆக அதிகரித்துள்ளது. தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்றுவருபவர்கள் ஒரு விழுக்காடாக உள்ளனர். இது தொடர்பாக சென்னை மாநகராட்சி மண்டல வாரியாக பாதிக்கப்பட்டவரின் விவரங்கள் அடங்கிய பட்டியலை வெளியிட்டுள்ளது.
அதில்,

அண்ணா நகர் -24,696

கோடம்பாக்கம் - 24,265

தேனாம்பேட்டை - 21,527

ராயபுரம் - 19,719

அடையாறு - 18,181

திரு.வி.க. நகர் - 17, 898

தண்டையார்பேட்டை - 17, 181

அம்பத்தூர் - 15,922

வளசரவாக்கம் - 14, 221

ஆலந்தூர் - 9,262

பெருங்குடி - 8, 295

மாதவரம் - 8, 110

திருவொற்றியூர் - 6,797

சோழிங்கநல்லூர் - 5,984

மணலி - 3,570

சென்னையில் இதுவரை மொத்தம் இரண்டு லட்சத்து 24 ஆயிரத்து 672 பேர் வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் இரண்டு லட்சத்து 17 ஆயிரத்து 902 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

எஞ்சியுள்ள இரண்டாயிரத்து 774 பேரும் மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சைப் பெற்றுவருகின்றனர். மேலும் மூன்றாயிரத்து 996 பேர் இந்த வைரஸ் தொற்றினால் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:'கரோனா காலத்திலும் ரூ.24,500 கோடி முதலீடு, 54 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு' - எடப்பாடி பழனிசாமி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.