ETV Bharat / state

குடியரசு தினத்தில் சட்டவிரோத மது விற்பனை: கண்டுகொள்ளாத காவல்துறை....

author img

By

Published : Jan 27, 2022, 12:58 PM IST

குடியரசு தினத்திலும் சட்டவிரோத மது விற்பனை கண்டுகொள்ளாத காவல்துறை
குடியரசு தினத்திலும் சட்டவிரோத மது விற்பனை கண்டுகொள்ளாத காவல்துறை

ஆதம்பாக்கத்தில் சட்ட விரோத மது விற்பனையை தடுக்க காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சென்னை ஆதம்பாக்கம் காவல் நிலையம் அருகில் உள்ள டாஸ்மாக் கடையில் சட்ட விரோத மது விற்பனை அமோகமாக நடைபெற்றது. குடியரசு தினத்தையும் பொருட்படுத்தாமல், அங்கேயே மது குடிக்க வைத்து குடிமகன்களை அனுப்பி வைக்கின்றனர்.

இதனை ஆதம்பாக்கம் போலீசார் மற்றும் கலால் போலீசார் மதுக்கடைகளைக் கண்டுகொள்ளாமல் விட்டு விடுவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

குடியரசு தினத்தில் சட்டவிரோத மது விற்பனை: கண்டுகொள்ளாத காவல்துறை....

எனவே இந்த விவகாரத்தில் உயர் அலுவலர்கள் தலையிட்டு சட்ட விரோதமாக நடக்கும் மது விற்பனையை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

இதையும் படிங்க:சென்னையில் மழை காலங்களில் நீர் தேங்காதவாறு நடவடிக்கை : அமைச்சர் கே.என். நேரு

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.