ETV Bharat / state

விமான பயணிகளின் கடத்தல் சேட்டை: சுங்கத் துறையினரின் அதிரடி வேட்டை!

author img

By

Published : Dec 5, 2019, 9:38 PM IST

gold smuggling caught at chennai airport
தங்கத்தை சுங்கத்துறை அலுவலர்கள் பறிமுதல்

சென்னை: துபாய், மலேசியாவிலிருந்து சென்னை விமான நிலையம் வந்த பயணிகளை சோதித்ததில் ஐந்து பேரிடமிருந்து 55 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான கடத்தல் தங்கம், வெளிநாட்டு கரன்சிகளை சுங்கத் துறையினர் பறிமுதல் செய்து அவர்களை கைது செய்து விசாரணை நடத்தினர்.

சென்னைக்கு துபாய், மலேசியா நாடுகளிலிருந்து வரும் விமானங்களில் தங்கம் கடத்தப்படுவதாக சுங்கத் துறை அலுவலர்களுக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து, விமான நிலையத்தில் தீவிர சோதனை நடத்தினர். அதில் உள்ளாடை, பைகளில் மூன்று பயணிகள் மறைத்து எடுத்துவந்த 1.13 கிலோ தங்கக்கட்டிகள், தங்க நகைகளை கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர். அதன் மதிப்பு சுமார் ரூ.44 லட்சம் எனக் கணக்கிடப்பட்டுள்ளது.

இந்தக் கடத்தலில் தொடர்புடைய ராமநாதபுரத்தைச் சோ்ந்த சேக் அப்துல்லா (28), தமீம் அன்சாரி (28), சிவகங்கையைச் சேர்ந்த அப்துல் பாசிக் (22) ஆகிய மூன்று பயணிகளை சுங்கத் துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.

தங்கத்தை சுங்கத்துறை அலுவலர்கள் பறிமுதல்

மேலும், மற்றொரு விமானத்தில் கடத்தமுயன்ற ரூ.11.5 லட்சம் மதிப்பிலான அமெரிக்க டாலா், சவுதி ரியால், யூரோ கரன்சி பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதில், ராமநாதபுரத்தைச் சோ்ந்த சையத் முகமது (22), சிவகங்கையைச் சோ்ந்த சபீா் அகமது (21) ஆகிய இருவர் கைது செய்யப்பட்டு அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது.

இதையும் படிங்க: கஞ்சா வழக்கில் கைது - பிறப்புறுப்பில் ஆசிட் ஊற்றி கொடுமை செய்த போலீசார்!

Intro:சென்னை விமானநிலையத்தில் ரூ.44 லட்சம் மதிப்புடைய 1.13 கிலோ தங்கம் பறிமுதல்Body:துபாய் மற்றும் மலேசியா நாடுகளிலிருந்து சென்னைக்கு வந்த விமானங்களில் கடத்திவந்த ரூ.44 லட்சம் மதிப்புடைய 1.13 கிலோ தங்கம் சென்னை விமான நிலையத்தில் பறிமுதல்.
உள்ளாடைகள் மற்றும் பைகளில் மறைத்து எடுத்துவந்த தங்கக் கட்டிகள்,தங்க நகைகளை சுங்கத்துறை சோதணையில் கண்டுப்பிடித்தனா்.
ராமநாதபுரத்தை
சோ்ந்த சேக் அப்துல்லா(28),
தமீம் அன்சாரி(28),
சிவகங்கையை சோ்ந்த அப்துல் பாசிக் (22) ஆகிய 3 பயணிகளை சுங்கத்துறை கைது செய்து விசாரணை.

சென்னையிலிருந்து துபாய் மற்றும் மலேசியா நாடுகளுக்கு விமானங்களில் கடத்தமுயன்ற ரூ.11.5 லட்சம் மதிப்புடைய அமெரிக்க டாலா்,
சவுதி ரியால்,யூரோ கரண்சி சென்னை விமான நிலையத்தில் பறிமுதல்.
உள்ளாடைகளுக்குள் வெளிநாட்டு பணக்கட்டுகளை மறைத்து வைத்து கடத்தமுயன்ற ராமநாதபுரத்தை சோ்ந்த சையத் மூகமது (22), சிவகங்கையை சோ்ந்த சபீா் அகமது (21) ஆகிய 2 பேரை சுங்கத்துறை கைது செய்து விசாரணை.

சென்னை விமானநிலையத்தில் அடுத்தடுத்து நடந்த சோதணைகளில் ரூ.55.5 லட்சம் மதிப்புடைய தங்கம் மற்றும் வெளிநாட்டு பணம் பறிமுதல் செய்யப்பட்டு 5 போ் கைது செய்யப்பட்டுள்ளனா்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.