ETV Bharat / state

சென்னையில் பெண் மருத்துவர் விஷ ஊசி செலுத்தி தற்கொலை முயற்சி!

author img

By

Published : Mar 5, 2022, 9:53 AM IST

சென்னையில் பெண் மருத்துவர் விஷ ஊசி செலுத்தி தற்கொலை முயற்சி!
சென்னையில் பெண் மருத்துவர் விஷ ஊசி செலுத்தி தற்கொலை முயற்சி!

சென்னையில் குடும்ப பிரச்சனை காரணமாக பெண் மருத்துவர் ஒருவர் விஷ ஊசி செலுத்தி தற்கொலைக்கு முயற்சித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை: கே.கே நகர் அருணாச்சலம் தெருவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பை சேர்ந்தவர் ராயலட்சுமி( 27). பெரியார் நகர் அரசு மருத்துவமனையில் மருத்துவராக பணியாற்றி வருகிறார். இவர் கடந்த 2020ஆம் ஆண்டு செங்கல்பட்டு மருத்துவக் கல்லூரியில் படிக்கும் போது ரோகித் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ரோகித் கே.கே நகர் ஈஎஸ்ஐ மருத்துவமனையில் பணியாற்றி வருகிறார்.

இந்நிலையில் கணவன், மனைவி இருவருக்குமிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் மருத்துவர் ராயலட்சுமி தனியார் மருத்துவமனை ஒன்றில் மன அழுத்தத்துக்காக சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் (மார்ச் 4) கணவன் - மனைவி இருவரும் விவாகரத்து செய்து கொள்ள முடிவெடுத்து வழக்கறிஞரை சந்திப்பதற்காக புறப்பட்டுள்ளனர்.

அப்போது ராயலட்சுமி திடீரென படுக்கை அறைக்கு சென்று கதவை தாழ்ப்பாள் போட்டு கொண்டார். நீண்ட நேரமாகியும் அறையை விட்டு வெளியே வராததால் சந்தேகமடைந்த ரோகித், கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்துள்ளார்.

அப்போது மயங்கிக் கிடந்த ராயலட்சுமியின் அருகே ஊசி இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். பின்னர் ராயலட்சுமி உடனடியாக மீட்கப்பட்டு வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இதுகுறித்து கே.கே நகர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: முன்னணி நிலக்கரி இறக்குமதி நிறுவனத்தின் இயக்குநர் கைது

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.