ETV Bharat / state

Anna University: சிவில் உள்ளிட்ட 4 பாடங்களில் சேர்க்கை இடங்கள் குறைப்பு!

author img

By

Published : Apr 23, 2023, 5:56 PM IST

Anna University: சிவில் உள்ளிட்ட 4 பாடங்களில் இடங்கள் குறைப்பு!
Anna University: சிவில் உள்ளிட்ட 4 பாடங்களில் இடங்கள் குறைப்பு!

வரும் கல்வியாண்டிற்கான பொறியியல் மாணவர்கள் சேர்க்கையில், சிவில் உள்ளிட்ட 4 பாடப் பிரிவுகளில் இடங்கள் குறைக்கப்பட்டும், தகவல் தொழில்நுட்பம் உள்ளிட்ட 6 பாடப் பிரிவுகளில் இடங்களை அதிகரித்தும் அறிவிப்பு வெளியாகி உள்ளது.

வரும் கல்வியாண்டிற்கான பொறியியல் மாணவர்கள் சேர்க்கையில், சிவில் உள்ளிட்ட 4 பாடப் பிரிவுகளில் இடங்கள் குறைக்கப்பட்டும், தகவல் தொழில்நுட்பம் உள்ளிட்ட 6 பாடப் பிரிவுகளில் இடங்களை அதிகரித்தும் அறிவிப்பு வெளியாகி உள்ளது
வரும் கல்வியாண்டிற்கான பொறியியல் மாணவர்கள் சேர்க்கையில், சிவில் உள்ளிட்ட 4 பாடப் பிரிவுகளில் இடங்கள் குறைக்கப்பட்டும், தகவல் தொழில்நுட்பம் உள்ளிட்ட 6 பாடப் பிரிவுகளில் இடங்களை அதிகரித்தும் அறிவிப்பு வெளியாகி உள்ளது

சென்னை: தமிழ்நாட்டில் பொறியியல் படிப்புகளை அண்ணா பல்கலைக்கழகத்தின்கீழ் 2023 - 2024ஆம் கல்வியாண்டில் மாணவர் சேர்க்கை அங்கீகாரம் அனுமதி வழங்குவதற்கான விண்ணப்பம், கடந்த ஜனவரி 13ஆம் தேதியில் இருந்து பெறப்பட்டு வருகிறது.

இந்த விண்ணப்பத்தின்போது, என்ஐஆர்எப் சான்றிதழ், கடந்த 3 ஆண்டுகளுக்கான வருவாய் மற்றும் செலவின கணக்கு சான்றிதழ், கடந்த 5 ஆண்டுகளில் கல்லூரியில் பாடப்பிரிவு வாரியாக சேர்ந்த மாணவர்களின் எண்ணிக்கையை அண்ணா பல்கலைக்கழகத்தின் தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலரின் ஆவணத்தில் உள்ளதுபோல் சமர்ப்பிக்க வேண்டும்.

அதேபோல், அனைத்து ஆசிரியர்களின் அடையாள அட்டை, பான் கார்டு, ஆதார் கார்டு, உண்மைச் சான்றிதழ் போன்றவையும் ஆய்வின்போது சமர்ப்பிக்க வேண்டும். மேலும், ஆசிரியர்களுக்கு அகில இந்திய தொழில்நுட்பக் குழுவின் பரிந்துரையின்படி ஊதியம் வழங்கப்பட்ட விவரம் உள்ளிட்டவையும் கேட்கப்பட்டன. இவர்களுக்கான அங்கீகாரம் பாட வாரியாக மாணவர்களை சேர்ப்பதற்கு அனுமதி அளிக்க நாளை (ஏப்ரல் 24) கடைசி நாள் ஆகும்.

அண்ணா பல்கலைக்கழகத்தின் அங்கீகாரம் பெற்று 2022 - 2023ஆம் கல்வியாண்டில் பி.இ., பி.டெக் பொறியியல் படிப்பில் தமிழ்நாட்டில் மத்திய அரசின் பொறியியல் கல்லூரிகள் 5, மாநில அரசின் பொறியியல் கல்லூரிகள் 11, அரசு உதவி பெறும் பொறியியல் கல்லூரிகள் 3, தனியார் சுயநிதி பொறியியல் கல்லூரிகள் 408 என்ற எண்ணிக்கையில் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் பி.ஆர்க் படிப்பானது 31 கல்லூரிகளில் வழங்கப்படுகிறது.

இந்த நிலையில், வருகிற 2023 - 2024ஆம் கல்வியாண்டில் பொறியியல் படிப்பில் மாணவர்கள் சேர்வதற்கான அங்கீகாரம், பாடப்பிரிவு வாரியாக அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, தமிழ்நாட்டில் செயல்பட்டு வரும் பொறியியல் கல்லூரிகளில் 2021 - 2022ஆம் கல்வியாண்டில் 2 லட்சத்து 23 ஆயிரத்து 676 இடங்களும், 2022 - 2023ஆம் கல்வியாண்டில் 2 லட்சத்து 32 ஆயிரத்து 872 இடங்களும் அனுமதி வழங்கப்பட்டன.

இதனையடுத்து 2022 - 2023ஆம் கல்வியாண்டில் அகில இந்திய தொழில்நுட்ப கல்விக் கழகம் புதிதாக அறிமுகம் செய்த கம்ப்யூட்டர் தொடர்புடைய பாடப் பிரிவுகளில் மாணவர்கள் சேர்வதற்கு கூடுதலாக இடங்கள் வழங்கப்பட்டன. அதேநேரம், சிவில் இன்ஜினியரிங், மெக்கானிக்கல் இன்ஜினியரிங், எலக்ட்ரானிக்ஸ் அண்டு கம்யூனிகேஷன் இன்ஜினியரிங், எலக்ட்ரிக்கல் இன்ஜினியரிங் உள்ளிட்ட 10 பாடப் பிரிவுகளில் மாணவர்கள் சேர்க்கை எண்ணிக்கை குறைத்து அனுமதி வழங்கப்பட்டன.

இந்த நிலையில், 2023 - 2024ஆம் கல்வியாண்டிலும் மாணவர்கள் சேர்க்கைக்கான அனுமதிக்கப்பட்ட இடங்களின் எண்ணிக்கையில் மாற்றங்கள் பாட வாரியாக ஏற்பட்டுள்ளது. சுமார் 134 பொறியியல் கல்லூரிகளில் பாடப் பிரிவுகளில் மாணவர்கள் சேர்க்கை எண்ணிக்கையில் மாற்றம் ஏற்பட்டுள்ளன.

சிவில் இன்ஜினியரிங் பிரிவில் ஆயிரத்து 110 இடங்களும், மெக்கானிக்கல் இன்ஜினியரிங் பிரிவில் ஆயிரத்து 836, இஇஇ (EEE) பிரிவில் 360 மற்றும் இசிஇ (ECE) பிரிவில் 390 இடங்களும் குறைந்து இருக்கின்றன. அதேநேரம், கம்ப்யூட்டர் சயின்ஸ் பாடப் பிரிவுகளுக்கான மொத்த இடங்களின் எண்ணிக்கை, கடந்த ஆண்டு 38 ஆயிரத்து 594ஆக இருந்த நிலையில், தற்போது கூடுதலாக ஆயிரத்து 800 இடங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன.

இதன்படி, தகவல் தொழில் நுட்பப் பிரிவில் பிரிவில் 15 ஆயிரத்து 463 இடங்களுடன், வரும் ஆண்டில் 2 ஆயிரத்து 280 இடங்களும், ஏ.ஐ., (Artificial Intelligence) மற்றும் டேட்டா சயின்ஸ் பிரிவில் 13 ஆயிரத்து 953 இடங்களுடன், 2 ஆயிரத்து 520 இடங்களும் அதிகரிக்கப்பட்டுள்ளன. அதேபோல், பி.இ., கம்ப்யூட்டர் சயின்ஸ் சைபர் செக்யூரிட்டி பாடப் பிரிவில் ஆயிரத்து 710 இடங்களுடன், ஆயிரத்து 200 இடங்களும் மாணவர்கள் சேர்க்கைக்கு கூடுதலாக அனுமதிக்கப்பட்டுள்ளது.

மேலும், பி.இ., கம்ப்யூட்டர் சயின்ஸ் ஏ.ஐ-மிஷின் லேர்னிங் பிரிவில் ஆயிரத்து 230 இடங்களுடன், 690 இடங்களும், எம்பிஏ பிரிவில் 17 ஆயிரத்து 58 இடங்களுடன், ஆயிரத்து 269 இடங்களும் அதிகரிக்கப்பட்டுள்ளன. பொறியியல் படிப்பில் பாடப்பிரிவுகளில் 9 ஆயிரத்து 759 இடங்களும் அதிகரிக்கப்பட்டுள்ளது. மொத்தமாக, 4 பாடப் பிரிவுகளில் 3 ஆயிரத்து 696 இடங்கள் குறைக்கப்பட்டுள்ளன. மேலும், தரமற்ற பொறியியல் கல்லூரிகளில் மாணவர்கள் எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளதுடன், சில கல்லூரிகள் மூடுவதற்கும் விண்ணப்பம் செய்துள்ளன.

இதையும் படிங்க: ஆழ்வார்திருநகரி கோயிலில் திருமலை நாயக்கரின் செப்புத் தகடுகள் கண்டெடுப்பு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.