ETV Bharat / state

'போதைப் பழக்கத்தால் விளையும் விளைவுகள்' - மாணவர்களுக்கு துணை ஆணையர் சுப்புலட்சுமி அறிவுரை

author img

By

Published : Oct 10, 2019, 9:43 AM IST

drug-awareness

சென்னை: ஆர்.கே. நகரில் உள்ள அரசுக் கல்லூரி மாணவர்களுக்கு போதைப்பொருள்களால் ஏற்படும் விளைவுகள் பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

சென்னை ஆர்.கே. நகரில் உள்ள அரசு கலை அறிவியல் கல்லூரியில் பயிலும் மாணவர்களுக்கு போதைப் பழக்கத்தினால் ஏற்படும் விளைவுகள் குறித்து வண்ணாரப்பேட்டை துணை ஆணையர் சுப்புலட்சுமி தலைமையில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் பேசிய அவர், மது போதைப்பொருள்களின் தாக்கத்தால் விபத்துகளில் சிக்கியும் உடல் நலிந்தும் உயிரிழப்போர் எண்ணிக்கை ஆண்டுக்காண்டு அதிகரித்துவருவதாகக் கூறினார்.

போதைப்பொருள்களால் ஏற்படும் விளைவுகள் பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி

மேலும், சிகரெட், புகையிலை, போதை பாக்கு, கஞ்சா ஆகியவற்றுக்கு இளைஞர்கள் அடிமையாகிவிடக்கூடாது என்றும் கல்லூரி மாணவர்கள் போதைப்பழக்கத்துக்கு அடிமையாகாமலும் தவறான பாதைக்குச் செல்லாமலும் விழிப்புணர்வுடன் இந்த பருவத்தை கடக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தினார். மேலும் இவ்வாறு இருப்பதினால் பல்வேறு குற்றச் சம்பவங்களும் தடுக்கப்படும் என்றார்.

இதையும் படிங்க : கூவத்தில் ஆண் சடலம் மீட்பு - சந்தேக மரணமாக வழக்குப்பதிவு!

Intro:சென்னை ஆர் கே நகரில் உள்ள அரசு கல்லூரி மாணவர்களுக்கு போதைப் பொருட்களால் ஏற்படும் விளைவுகள் பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றதுBody: சென்னை ஆர் கே நகரில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பயிலும் மாணவர்களுக்கு போதை பழக்கத்தினால் ஏற்படும் விளைவுகள் குறித்து வண்ணாரப்பேட்டை துணை ஆணையாளர் சுப்புலட்சுமி தலைமையில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது இந் நிகழ்ச்சியில் மாணவர்களிடம் பேசிய அவர் மது மற்றும் போதை பொருட்களின் தாக்கத்தால் விபத்துக்களில் சிக்கியும் உடல் நலிந்தும் உயிரிழப்போர் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருவதாக கூறினார்

சிகரெட், புகையிலை, போதை பாக்கு, கஞ்சா ஆகியவற்றுக்கு இளைஞர்கள் அடிமையாகிவிடக்கூடாது என்றும்
கல்லுாரி மாணவர்கள் போதை பழக்கத்துக்கு அடிமையாகமலும், தவறான பாதைக்கு செல்லாமலும் விழிப்புணர்வுடன் இந்த பருவத்தை கடக்க வேண்டும் என அவர் மாணவர்களிடம் அறிவுரை வழங்கினார் மேலும் இவ்வாறு இருப்பதினால் பல்வேறு குற்ற சம்பவங்களும் தடுக்கப்படும் என கூறினார். இந்நிகழ்ச்சியில் அக்கல்லூரி தலைமை ஆசிரியர் மற்றும் மாணவர்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.Conclusion:சென்னை ஆர் கே நகரில் உள்ள அரசு கல்லூரி மாணவர்களுக்கு போதைப் பொருட்களால் ஏற்படும் விளைவுகள் பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.