ETV Bharat / state

தமிழ்நாட்டில் தொடர்ந்து குறைந்துவரும் கரோனா தொற்று

author img

By

Published : Jul 10, 2021, 10:55 PM IST

கரோனா தொற்று
கரோனா தொற்று

கரோனா பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்றுவந்த நோயாளிகளில் குணமடைந்தவர்கள் 3,321 பேர் வீட்டிற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் குணமடைந்துவருபவர்களின் எண்ணிக்கை 24 லட்சத்து 49 ஆயிரத்து 873 என உயர்ந்துள்ளது.

சென்னை: தமிழ்நாட்டில் மேலும் புதிதாக ஒரு லட்சத்து 50 ஆயிரத்து 412 நபர்களுக்கு ஆர்டி-பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் 2,193 நபர்களுக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் இதுவரை மூன்று கோடியே 43 லட்சத்து 98 ஆயிரத்து 110 நபர்களுக்கு ஆர்டி-பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதன்மூலம் 25 லட்சத்து 16 ஆயிரத்து 11 நபர்கள் கரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டிருந்தனர் என்பது கண்டறியப்பட்டது.

இவர்களில் தற்போது மருத்துவமனைகள், தனிமைப்படுத்தும் மையங்களில் 32 ஆயிரத்து 767 பேர் சிகிச்சைப் பெற்றுவருகின்றனர்.


குறைந்துவரும் கரோனா தொற்று

குறைந்து வரும் கரோனா தொற்று
குறைந்துவரும் கரோனா தொற்று

சிகிச்சைப் பெற்றுவந்த நோயாளிகளில் குணமடைந்தவர்கள் 3,321 பேர் வீட்டிற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் குணமடைந்து வருபவர்களின் எண்ணிக்கை 24 லட்சத்து 49 ஆயிரத்து 873 என உயர்ந்துள்ளது.

மேலும், மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்றுவந்த நோயாளிகளில் தனியார் மருத்துமனைகளில் ஆறு பேரும், அரசு மருத்துவமனைகளில் 43 பேரும் என 49 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதையும் படிங்க: ’இனி 2 வயது முதல் கோவாக்சின் தடுப்பூசி’ - டிசிஜிஐ அனுமதி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.