ETV Bharat / state

நடிகை குஷ்பு மன்னிப்பு கேட்க வேண்டும்.. 'சேரி மொழி' விவகாரத்தில் போராட்டத்தில் குதித்த காங்கிரஸ்!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 28, 2023, 5:19 PM IST

Updated : Nov 28, 2023, 5:52 PM IST

Congress party members protest against Khushbu and warned the protest would continue if she did not apologize
குஷ்புவுக்கு எதிராக காங்கிரசார் போராட்டம்

Congress protest against Khushbu: குஷ்புவிற்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட காங்கிரசார், அவரது உருவ படத்திற்கு செருப்பு மாலை அணிவித்து, துடைப்பத்தால் அடித்து தங்கள் கண்டனங்களைத் தெரிவித்தனர்.

குஷ்புவுக்கு எதிராக காங்கிரசார் போராட்டம்

சென்னை: தமிழக காங்கிரஸின் எஸ்.சி துறை சார்பில், சென்னை பட்டினப்பாக்கத்தில் உள்ள நடிகை குஷ்பு வீட்டை முற்றுகையிடும் போராட்டம் இன்று (நவ.28) சாந்தோம் நெடுஞ்சாலையில் நடைபெற்றது.

நடிகர் மன்சூர் அலிகான், நடிகை திரிஷாவை குறித்து வெளியிட்ட சர்ச்சைக்குரிய கருத்துக்கு அண்மையில், தேசிய மகளிர் ஆணைய உறுப்பினரும், நடிகையுமான குஷ்பு கண்டனம் தெரிவித்திருந்தார். அப்போது சமூக வலைத்தளத்தில் குஷ்புவிற்கு எதிராக கருத்து பதிவிட்டவருக்கு பதில் அளிக்கும் விதமாக குஷ்பு பதிவிட்டிருந்த பதிவில் "சேரி மொழி" என்று குறிப்பிட்டதற்கு பல்வேறு அமைப்பினர்கள் மற்றும் காங்கிரஸ் எஸ்.சி.துறை கண்டனம் தெரிவித்திருந்தது. மேலும், குஷ்பு மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் வற்புறுத்தியது.

இந்நிலையில், தமிழக காங்கிரஸின் எஸ்.சி துறை சார்பில், சென்னை பட்டினப்பாக்கத்தில், உள்ள நடிகை குஷ்பு வீட்டை முற்றுகையிடும் போராட்டமானது இன்று நடைபெற்றது. இந்த போராட்டமானது, தமிழக காங்கிரஸின் எஸ்.சி துறை மாநிலத் தலைவர் ரஞ்சன் குமார் தலைமையில் நடைபெற்றது.

இதில் காங்கிரஸ் கட்சியினர் மற்றும் எஸ்.சி துறை நிர்வாகிகள் கலந்துக் கொண்டு நடிகை குஷ்புவிற்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர். அதைத் தொடர்ந்து, குஷ்புவின் உருவப்படத்திற்கு, செருப்பு மாலை அணிவித்து துடப்பத்தால் அடித்தனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரப்பு ஏற்பட்டது. பின்னர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் கைது செய்து பேருந்துகளில் ஏற்றி அழைத்துச் சென்றனர்.

அப்போது பேருந்தில் இருந்தபடி செய்தியாளர்களிடம் பேசிய ரஞ்சன்குமார், "இன்று வரை குஷ்பு தான் பேசியதற்கு மன்னிப்பு கேட்கவில்லை. பாஜகவும் மௌனம் காக்கின்றது. பாஜகவில் இருக்கும் துரைசாமி, எல்.முருகன், பாஜகவின் தலித் பிரிவு நிர்வாகிகள் ஏன் மௌனம் காக்கிறார்கள். பாஜகவிற்கு தலித் மக்களின் மீது அக்கறை இல்லையா? பாஜக தமிழகத்தில் சாதி ரீதியில் பிரிவனை செய்தவற்காக செயல்பட்டு வருகிறது.

பூர்வக்குடி மக்களை தொடர்ந்து குஷ்பு அவமானப்பட்டுத்தி வருகிறார். அதற்கு மன்னிப்பு கேட்கவும் மறுக்கிறார். இது எங்களின் முதற்கட்ட போராட்டம் தான். குஷ்பு மன்னிப்பு கேட்காவிட்டால் எஸ்சி-எஸ்டி வன்கொடுமை சட்டத்தின் கீழ் நாங்கள் வழக்கு தொடருவோம். இன்று போல் நாளை அனைத்து மாவட்டங்களிலும் எஸ்.சி. துறை மாவட்ட தலைவர்கள் போராட்டம் நடத்தி, அந்தந்த மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர்களிடம் மனு கொடுப்பார்கள்.

இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்யும்படி மாநில தாழ்த்தப்பட்டோர் ஆணையத்திலும் புகார் செய்வோம். அதன்பிறகு குஷ்புவை கண்டிக்கவும், நடிகர் சங்கத்தில் இருந்து நீக்கவும் கோரி நடிகர் சங்க தலைவரிடம் புகார் அளிக்க உள்ளோம்" எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: "இனி வரும் காலங்களில் குஷ்பு நாவடக்கத்தோடு பேச வேண்டும்" - வீரலட்சுமி

Last Updated :Nov 28, 2023, 5:52 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.