ETV Bharat / state

தைப் பொங்கல் விடுமுறை அளிக்கக்கோரி கேரளா முதலமைச்சருக்கு ஸ்டாலின் கடிதம்

author img

By

Published : Jan 13, 2022, 2:04 PM IST

தைப் பொங்கல் விடுமுறை
தைப் பொங்கல் விடுமுறை

கேரளாவில் தமிழ் பேசும் மக்கள் அதிகம் வாழும் ஆறு மாவட்டங்களுக்கு ஜனவரி 14 அன்று பொங்கல் பண்டிகையை கொண்டாட உள்ளூர் விடுமுறை அறிவிக்கக் கோரி கேரள முதலமைச்சர் பினராயி விஜயனுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

சென்னை: தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை கொண்டாட மக்கள் தயாராகி வருகின்றனர். தமிழ்நாட்டில் ஜனவரி 14 பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது.

இந்நிலையில், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கேரளா முதலமைச்சர் பினராயி விஜயனுக்கு இன்று (ஜன.13) கடிதம் எழுதியுள்ளார்.

அதில், "தமிழ் பேசும் மக்கள் பெருமளவில் வாழும் கேரளாவின் ஆறு மாவட்டங்களில் பொங்கல் பண்டிகைக்கு உள்ளூர் விடுமுறை அறிவிப்பது குறித்த கோரிக்கை தொடர்பாக தங்கள் அன்பான, உடனடி கவனத்தை ஈர்க்க விழைகிறேன்.

கடந்த 12 ஆண்டுகளாக கேரள அரசு ஜனவரி 14 ஆம் நாளினை பொங்கல் பண்டிகைக்கான உள்ளூர் விடுமுறையாக அறிவித்து வருகிறது என்று அறிகிறேன்.

ஜனவரி 14 ஆம் தேதி, புனிதமான "தை" தமிழ் மாதத்தின் முதல் நாளாகும். ஆனால் இந்த 2022ஆம் ஆண்டில் ஜனவரி 15ஆம் நாளினை இந்த ஆறு மாவட்டங்களில் விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆகவே, உலகம் முழுவதும் கொண்டாடப்படும் பொங்கல் பண்டிகைக்கான உள்ளூர் விடுமுறை தினமாக ஜனவரி 14ஆம் நாளை அறிவித்திட நடவடிக்கை மேற்கொள்ள நான் தங்களை அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்" என்று கூறியுள்ளார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.