ETV Bharat / state

பாசனத்திற்காக புள்ளம்பாடி, புதிய கட்டளை மேட்டு கால்வாய்களில் தண்ணீர் திறக்க உத்தரவு!

author img

By

Published : Aug 16, 2020, 4:49 PM IST

CM orders Pullambadi canal water for irrigation
CM orders Pullambadi canal water for irrigation

சென்னை: புள்ளம்பாடி, புதிய கட்டளை மேட்டு கால்வாய்களில் நடப்பாண்டு பாசனத்திற்காக தண்ணீர் திறக்க முதலமைச்சர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

இது குறித்து தமிழ்நாடு முதலமைச்சர் பழனிசாமி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “மேட்டூர் அணையிலிருந்து, புள்ளம்பாடி, புதிய கட்டளை மேட்டு கால்வாய்களின் பாசனத்திற்காக தண்ணீர் திறந்து விடும்படி, திருச்சி, தஞ்சாவூர், அரியலூர் மாவட்ட வேளாண் பெருமக்களிடமிருந்து கோரிக்கைகள் வந்துள்ளன.

இதையேற்று, மேட்டூர் அணையிலிருந்து, புள்ளம்பாடி, புதிய கட்டளை மேட்டு கால்வாய்களில் நடப்பாண்டு பாசனத்திற்காக வரும் செவ்வாய்க்கிழமை (ஆக. 18) முதல் டிசம்பர் 31ஆம் தேதி வரை 136 நாட்களுக்கு தண்ணீர் திறந்து விட உத்தரவிடப்பட்டுள்ளது.

இதன் மூலம் திருச்சி, தஞ்சாவூர், அரியலூர் மாவட்டங்களில் 42 ஆயிரத்து 736 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும், விவசாயப் பெருமக்கள் நீரை சிக்கனமாக பயன்படுத்தி, நீர் மேலாண்மை மேற்கொண்டு, உயர் மகசூல் பெற வேண்டும் என அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க...அமெரிக்கா டூ துளசேந்திரபுரம்; கமலா ஹாரிசின் வேர்களை நோக்கிய பயணம் இது!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.