ஜப்பானில் முதலமைச்சர் ஸ்டாலின்.. செங்கல்பட்டில் ஆலை விரிவாக்கம் செய்ய ஒப்பந்தம்!

author img

By

Published : May 26, 2023, 11:24 AM IST

Chief Minister Stalin visited Japan and signed an agreement with Daicel to expand its own plant at Chengalpattu

ஜப்பான் சென்றுள்ள தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் முன்னிலையில் செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள டைசல் நிறுவனத்தின் ஆலையை விரிவாக்கம் செய்ய புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.

சென்னை: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் நாடுகளுடன் தமிழ்நாட்டிற்கு உள்ள பொருளாதார மற்றும் வர்த்தக உறவுகளை மேம்படுத்தும் வகையிலும், சென்னையில் 2024 ஜனவரி மாதம் நடைபெறவுள்ள உலக முதலீட்டாளர்கள் மாநாட்டிற்கு அழைப்பு விடுக்கும் வகையிலும், தமிழ்நாட்டிற்கு முதலீடுகளை ஈர்க்கும் நோக்கத்திலும், சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் நாடுகளுக்கு அரசு முறைப் பயணம் மேற்கொள்வதற்காக 23.5.2023 அன்று சென்னையிலிருந்து சிங்கப்பூர் புறப்பட்டு சென்றார்.

சிங்கப்பூரின் முன்னனி நிறுவனங்களின் தலைமைச் செயல் அலுவலர்களை சந்தித்த அவர், தமிழ்நாட்டில் தொழில் துவங்குவதற்கு நிலவும் சாதகமான சூழல்களை எடுத்துக்கூறி, தமிழ்நாட்டில் முதலீடு செய்யும் படி கோரிக்கை விடுத்தார். மேலும் சிங்கப்பூர் நிறுவனங்கள் தமிழ்நாட்டில் காற்றாலை அமைப்பதற்கும், ஸ்டார்ட் அப் நிறுவனங்களில் முதலீடு செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தார்.

சென்னையில் 2024 ஜனவரி மாதம் நடைபெற உள்ள உலக முதலீட்டாளர் மாநாட்டில் கலந்துகொள்ளுமாறு பல்வேறு நிறுவனங்களில் தலைமைச் செயல் அலுவலர்களுக்கு அழைப்பு விடுத்தார். மேலும் சிங்கப்பூர் தமிழ்கலைச் சங்கங்களுடன் இணைந்து நடைபெற்ற தமிழ் கலைப் பண்பாட்டு நிகழ்ச்சியில் பங்கேற்ற முதலமைச்சர் ஸ்டாலின், சிங்கப்பூரின் தந்தை என போற்றப்படும் லீ குவான் யூ-விற்கு தமிழ்நாட்டில் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் நினைவுச் சின்னம் எழுப்பப்படும் என அறிவித்தார்.

இதையும் படிங்க: மன்னார்குடியில் சிங்கப்பூரின் தந்தை 'லீ குவான் யூ' நினைவுச் சின்னம்: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு!

பின்னர் முதலமைச்சர் ஸ்டாலின் சிங்கப்பூரில் இருந்து ஜப்பான் புறப்பட்டுச் சென்றார். ஜப்பானின், ஒசாகா மாகாணத்தில், தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் முன்னிலையில் இன்று (26.05.2023) தமிழ்நாடு வழிகாட்டி நிறுவனத்திற்கும் ஜப்பான் நாட்டைச் சேர்ந்த டைசல் சேஃப்டி சிஸ்டம்ஸ் (Daicel Safety Systems) நிறுவனத்திற்கும் இடையே, செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூரில் உள்ள டைசல் நிறுவனத்தின் Airbag Inflator தயாரிப்பு தொழிற்சாலையை விரிவாக்கம் செய்யும் திட்டத்திற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.

  • ஜப்பான் நாட்டின் ஒசாகா மாகாணத்தில், தமிழ்நாடு வழிகாட்டி நிறுவனத்திற்கும் ஜப்பான் நாட்டைச் சேர்ந்த டைசல் சேஃப்டி சிஸ்டம்ஸ் (Daicel Safety Systems) நிறுவனத்திற்கும் இடையே, செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூரில் உள்ள டைசல் நிறுவனத்தின் Airbag Inflator தயாரிப்பு தொழிற்சாலையை… pic.twitter.com/qRI7HjNYXg

    — CMOTamilNadu (@CMOTamilnadu) May 26, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

இப்புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் டைசல் நிறுவனத்தின் வணிக இயக்கப்பிரிவு தலைவர் கென் பாண்டோ, தமிழ்நாடு வழிகாட்டி நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் வே.விஷ்ணு, அவர்களும் கையொப்பமிட்டனர். இந்நிகழ்வின்போது, தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா, தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் எஸ். கிருஷ்ணன், ஒசாகாவிற்கான இந்தியத் தூதர் நிகிலேஷ் கிரி, டைசல் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் சிஹிரோ அவோகி மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.

இதையும் படிங்க: Senthil Balaji: அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு சொந்தமான இடங்களில் ஐடி ரெய்டு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.