ETV Bharat / state

செல்ஃபோன் டவரில் தீ விபத்து - கீழ்ப்பாக்கத்தில் பதற்றம்!

author img

By

Published : Jan 14, 2020, 6:21 PM IST

fire
டவரில் தீ விபத்து

சென்னை: கீழ்ப்பாக்கத்தில் செல்ஃபோன் டவர் வெடித்ததில் தீ விபத்து ஏற்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

சென்னை கீழ்ப்பாக்கத்தில் பூவிருந்தவல்லி நெடுஞ்சாலையில் பத்து அடுக்கு மாடிகளைக் கொண்ட பெட்டிகோரா டவர் உள்ளது. இங்கு பத்தாவது மாடியில் தனியாருக்கு சொந்தமான செல்ஃபோன் டவர் இயங்கிவருகிறது. இந்நிலையில், இன்று காலை திடீரென்று டவரின் ஜெனரேட்டர் வெடித்ததில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

இந்த தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்புத் துறையினர் சுமார் ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தின்போது, காவலாளி ராஜமாணிக்கத்திற்கு டவர் அருகிலிருந்த கேபிள்களை தள்ளியபோது கை, முகம், கழுத்து பகுதிகளில் தீக்காயம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து கீழ்ப்பாக்கம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

இதையும் படிங்க: நூதன முறையில் சேலை வியாபாரியிடம் மோசடி - 4 பேர் கைது!

Intro:Body:சென்னை கீழ்ப்பாக்கத்தில் செல்போன் டவர் வெடித்து தீவிபத்து. தீயணைப்பு துறை வீரர்கள் விரைந்து சென்று தீயை அணைத்தனர். இதில் காவலாளிக்கு பலத்த காயம்...

சென்னை கீழ்பாக்கம் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் பத்து அடுக்கு மாடிகளை கொண்ட
பெட்டிகோரா டவரில் பத்தாவது மாடியில் தனியார் செல்போன் டவர் உள்ளது. அதில் உள்ள ஜெனரேட்டர் இன்று காலை வெடித்ததில் தீ விபத்து ஏற்பட்டது...

உடனடியாக கீழ்ப்பாக்கம் தீயணைப்புதுறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.பின்னர் 2 தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து தீயணைப்பு வீரர்கள் 1 மணி நேரமாக போராடி தீயை உடனடியாக அணைத்தனர்.

அதற்குள் மேலே சென்ற காவலாளி ராஜமாணிக்கம் தீ விபத்து ஏற்பட்ட இடத்திற்கு சென்று அங்கு இருந்த கேபிள்களை தள்ளிய போது அவர் கை மற்றும் முகம் கழுத்துப் பகுதிகளில் தீக்காயம் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக ராஜமாணிக்கம் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டு உள்ளனர். பின்னர் இந்த தீ விபத்து குறித்து கீழ்ப்பாக்கம் போலீசார் விசாரித்து வருகின்றனர்Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.