ETV Bharat / state

நடிகை மீரா மிதுன் மீண்டும் கைது!

author img

By

Published : Mar 25, 2022, 2:04 PM IST

Updated : Mar 26, 2022, 9:30 AM IST

நடிகை மீரா மிதுன் மீண்டும் கைது
நடிகை மீரா மிதுன் மீண்டும் கைது

வழக்கு விசாரணைக்கு ஆஜராகாத நிலையில், நடிகை மீரா மிதுனை சென்னை சைபர் கிரைம் காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

சென்னை: பட்டியலினத்தவர்கள் குறித்து சமூக வலைதளங்களில் அவதூறு கருத்துகளை தெரிவித்ததாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் நடிகையும், மாடல் அழகியுமான மீரா மிதுன், அவரது நண்பர் சாம் அபிஷேக் ஆகியோர் மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல் துறையினரிடம் கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் புகார் அளிக்கப்பட்டது.

அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் இருவரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். அதன்பின்பு இருவரும் பிணையில் விடுவிக்கப்பட்டனர்.

நடிகை மீரா மிதுன் மீண்டும் கைது

இந்த வழக்கில் அவர்கள் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில், இந்த வழக்கு முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி எஸ்.அல்லி முன்பு விசாரணைக்கு வந்தபோது, மீரா மிதுன் ஆஜராகவில்லை.

இதையடுத்து, அவருக்கு எதிராக ஜாமீனில் வர முடியாத பிடிவாரண்ட் பிறப்பித்து, அவரைக் கைது செய்து ஏப்ரல் 4ஆம் தேதி ஆஜர்படுத்த மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினருக்கு நீதிபதி உத்தரவிட்டார்.

இந்நிலையில் வழக்கு விசாரணைக்கு ஆஜராகாத நடிகை மீரா மிதுனை சென்னை சைபர் கிரைம் காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

இதையும் படிங்க: ‘செஞ்சிருவேன்’ மாரி பட டயலாக்கை எஸ்ஐ-க்கு டெடிகேட் செய்த இளைஞர்

Last Updated :Mar 26, 2022, 9:30 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.